உலக கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் இந்தியன் பிரிமியர் லீக் தற்போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. மேலும் முன்னணி வீரர்களே சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்சம் பணம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டியை தடை செய்யக்கோரி பல்வேறு சமூக நல அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் சூதாட்டத்தை தடைசெய்வதற்கு ஏற்றாற்போல் வலுவான ஒரு சட்டத்தை இயற்றி அதை உடனடியாக அமல்படுத்த போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி முதற்கட்டமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன், சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
|