LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி மத்திய அரசு நிதியுதவி வழங்கியது!

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கியது.

ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில், நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. செயல்பாட்டு மூலதனம் மற்றும் வட்டி கட்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வரும் ஏர் இந்தியா நிறுவனம், எண்ணெய் நிறுவனங்களிடம் சுமார் 4200 கோடி ரூபாய் கடன் வைத்து உள்ளது.

இதனால் எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் சூழல் உருவாகி உள்ளதால், மத்திய அரசிடம் உதவி கோரியது. மேலும் மத்திய அரசு உத்தரவாதத்தின் அடிப்படையில் நிதி திரட்டி வருகிறது. இந்த பணிகள் அடுத்த வாரத்துக்குள் நிறைவு பெற்று விடும் என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

இந்த நிலையில் ரூ.2,131 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் ஏர் இந்தியா கோரிக்கை வைத்தது. இதனையடுத்து தேசிய சிறுசேமிப்பு நிதியகத்தின் மூலம் ஏர் இந்தியாவுக்கு ரூ.1,000 கோடி மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.

 இது குறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி, "கடனில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனம் தற்போது திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கான வட்டியைக் கட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறது" என்று கூறி உள்ளார். எனவே வரும் வாரத்தில் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் பெற உள்ளதாக தெரிவித்து உள்ளார். 

by Mani Bharathi   on 19 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.