அமைச்சர் ப. சிதம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்குப் பிறகு, எதையோ சாதித்துவிட்டது போலப், பேசியிருந்தார். ஆனால், என்ன நடந்திருக்கிறது?, மறு நாளே பெட்ரோலின் விலையை லிட்டருக்கு, ஒரு ரூபாய் நாற்பது காசு (1.40) உயர்த்திவிட்டனர். பட்ஜெட்டுக்கு முன்னும், பின்னும், இதுவரை மொத்தம், மூன்று ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டார். இது, இந்திய மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம். இந்தப் பிரச்சினையை, நடந்து வருகின்ற பார்லிமென்ட் கூட்டத் தொடரில், பெரிதாக எழுப்புவோம். ஏற்கனவே விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களுக்கு, இனிமேல், பெட்ரோல் விலை உயர்வும் சேர்ந்து மேலும் துன்பத்தைக் கொடுத்துள்ளது. இவ்வாறு, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.
|