டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல் மற்றும் பருப்பு வகைகளுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையை உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி நெல் குவிண்டால் ஒன்றிற்கு சுமார் 60 ரூபாய் அதிகரித்து ரூ.1,310 ஆக அறிவித்துள்ளது. மேலும் எண்ணெய் வகைகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி குவிண்டால் 350 என்ற விலையில் இருந்த எண்ணெய் வித்துக்களுக்கு இனிமேல் 450 ரூபாய் என்ற அளவில் வழங்க முடிவு செய்யப்ப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
|