தமிழகத்திற்கு டில்லி அரசின் உபரி மின்சாரத்தை வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தற்போது கடும் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது.தமிழகத்திற்கு மட்டும் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைபடுகிறது.ஆனால், தற்போது 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால், மின் பற்றக் குறையை போக்கும் பொருட்டு "டில்லி மாநில அரசு, மத்திய மின் தொகுப்பிடம் திரும்ப ஒப்படைக்கும், 1,721 மெகாவாட் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும்' என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு அல்தாமஸ் கபீர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசின் சார்பில் ஆஜரான அதிகாரிகள் தமிழகத்தில் மின் தொகுப்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் இதனால் உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.இதை கேட்ட நீதிபதிகள் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர் மேலும் இது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய மின் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்
|