பல்வேறு ஊழல் வழக்குகளில் மத்திய புலனாய்வு துறை தன்னிச்சையான விசாரணைகளை மேற்கொள்ள தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த ஆய்வு குழுவின் தலைவாராக பா.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த குழுவில் மத்திய மந்திரிகள் சல்மான்குர்ஷித், கபில்சிபல் தகவல் தொழில் நுட்பம் துறை, மணீஷ்திவாரி, வி.நாராயணசாமி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு குழுவினர் சி.பி.ஐ.யை தன்னாட்சி அமைப்பாக மாற்றுவதற்கான சட்டம் இயற்றுதல், சி.பி.ஐ.யின் தன்னாட்சி உரிமையை வலுப்படுத்துவது, வெளிநபர்களின் தலையீட்டினை தடுப்பது பற்றியெல்லாம் மத்திய அரசுக்கு தகுந்த பரிந்துரைகளை அளிப்பார்கள். இந்த குழுவின் கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித்சின்கா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தனது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|