|
|||||
பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய அரசு முடிவு !! |
|||||
பெண்களின் பாதுகாப்பு கருதி பேருந்துகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது, பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள முக்கியமான 32 நகரங்களில் உள்ள பேருந்துகளில் சி.சி.டி.வி. பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் பாதுகாப்பாக வெளியில்
செல்ல முடியும், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், பேருந்துகள் செல்லும் இடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான நிதி
விரைவில் ஒதுக்கப்பட்டு சில மாதங்களில் அமலுக்கு வரப்போவதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு கருதி பேருந்துகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது, பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள முக்கியமான 32 நகரங்களில் உள்ள பேருந்துகளில் சி.சி.டி.வி. பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல முடியும், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், பேருந்துகள் செல்லும் இடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்பட்டு சில மாதங்களில் அமலுக்கு வரப்போவதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
|
|||||
by Swathi on 02 Jan 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|