வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் பொருட்டு, அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க போவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்ந்து வருகிறது. ஆனால் அங்கு தற்போது கனமழை பெய்து வருவதால், வெங்காய உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் வெங்காயத்தின் விலை அதிகரித்து, கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இதனால் இந்த விலை உயர்வை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு விரைவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதிக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|