LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செவ்விலக்கியங்களில் பன்முகப் பார்வை - பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் சென்னை, அடையாறில் அமைந்துள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து 27.03.2019 அன்று செவ்விலக்கியங்களில் பன்முகப் பார்வை (தொல்லியல் - வரலாறு - பண்பாடு- மானுடவியல்- மொழியியல்) எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பெற்றது. கருத்தரங்க தொடக்க விழாவில் அக்கல்லுரியின் இயக்குநர் மற்றும் செயலாளர் அருட்சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தன்பால் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். மாண்புமிகு நீதியரசர் பொன். கலையரசன் மற்றும் மாநிலக் கல்லுரியின் மேனாள் பேராசிரியர்கள் முனைவர் சுதந்திரமுத்து, பேரா. முனைவர் முத்துவேலு , இந்து நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆசிரியர் திரு. சமஸ்ஆகியோர் கருத்தரங்க நூலினை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினர். அக்கல்லுரியின் துணை முதல்வர் பேரா. முனைவர் ஆரோக்கியமேரி கீதா ரூபஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவு விழாவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் கருத்துரை வழங்கினார்.அவர் பேசுகையில் செவ்வியல் என்ற பதத்திற்குத் திருந்திய,மேன்மை அடைந்த, உயர்ந்த, நாகரிகமடைந்த என்று பொருள் கொள்ளப்படுகின்றது. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த கருத்துகளை தமிழ்ச் செவ்விலக்கியங்கள் பதிவுச்செய்துள்ளன.இக்கருத்துகள் உலக மக்களின் வாழ்வியல் மேலாண்மைக்கு என்றும் பொருந்தக்கூடியதாக உள்ளது. உலக நாகரிகங்களுக்கு அக மற்றும் புறக் கோட்பாடுகளை வழங்கிய நாகரிகம் தமிழர் நாகரிகம். உலகத் சிந்தனையாளர்கள் உருவாகக் காரணமாகத் திகழ்வதும் தமிழ்ச் செவ்விலக்கியங்களே என்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் யா. மணிகண்டன் அவர்கள் கட்டுரையாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.அவர் பேசுகையில் இன்று தரமான கல்வியும் உண்மையான ஆய்வும் தமிழ் மொழியில் தேவை. அத்தேவையினை அறிந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலக மக்களிடம் தமிழின் சிறப்புகளை கொண்டு சேர்க்கும் பணியினைச் சிறப்பாகச் செய்து வருகின்றது என்றார்.

இக்கருத்தரங்கில் பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை, களப் புல முதன்மையர் முனைவர் அகிலா சிவசங்கர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அக்கல்லுரியின் தமிழ்த் துறை தலைவரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான பேரா. முனைவர் சத்தியப்பிரியா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.பேரா. முனைவர் இராஜசேகர் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இக்கருத்தரங்கம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன், பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேரா. முனைவர் ஜோசப் துரை ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அக்கல்லுரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முனைவர் தனஞ்செயன், ரெங்கராஜ், சுப்பிரமணியன்,தேவேந்திரன், மியான்மார் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

by Swathi   on 29 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.