LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சந்திராயன்-2 விண்கலம்: சோதனை ஓட்டம் வெற்றி!

விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன் - 2 விண்கலத்தின் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. 

சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் தயாரிப்பின் முக்கிய அம்சங்கள் நிறைவு  பெற்று விட்டன. 

இந்த விண்கலம், ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.3 மூலம் அடுத்த ஆண்டு விண்ணில் பாய உள்ளது. இதற்கு மிக முக்கியமாக இன்ஜின் சி.இ.20 தேவை. இந்த இன்ஜின் செயற்கைக்கோள் இயக்கத்தின் மிக முக்கியப்  பணிகளை மேற்கொள்கிறது.

திரவ ஆக்சிஜனுடன் இணைந்து வாயுவை உற்பத்தி செய்கிறது. மேலும், திரவ ஹைட்ரஜன் உற்பத்தி செய்யவும் இன்ஜின்  பயன்படுத்தப் படுகிறது. இதற்கான இன்ஜின்  சி.இ.20 மகேந்திரகிரியில் உள்ள  இஸ்ரோ உந்து வளாகத்தில் தயாராகி வருகிறது.  இதன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது:

 ‘’சந்திராயன்-2ல் ஜிஎஸ்எல்வி எம்கே.-3 செயற்கைக்கோளின் முக்கிய பாகமான இன்ஜின் சோதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இன்ஜின் இயக்கப்பட்டு சோதனை  செய்யப்பட்டது. அனைத்து இயக்கங்களும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

இந்த சோதனை 25 வினாடிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சந்திராயன்- 1 விண்கலத்தைப் போல இல்லாமல் இந்த சந்திராயன்- 2 விண்கலம் மிகவும்  மென்மையாக லூனார் தரைத்தளத்தில் இறங்கும்.

ஏற்கனவே, சந்திராயன் -1 வி்ண்கலம் அனுப்பியுள்ள தகவல்களை வைத்து அதற்கேற்றார் போல சந்திராயன் -2 விண்கலம் உருவாக்கப்பட்டு உள்ளது’’ 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

by Mani Bharathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.