இஸ்லாமியர்களின் புத்தாண்டாக கருதப்படும், மொகரம் பண்டிகையின் விடுமுறை தேதி மாற்றப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இஸ்லாமியர்களின், நாட்காட்டி அடிப்படையில், மொகரம் மாதத்தின் முதல் நாளை, இஸ்லாமிய புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மொகரம் பண்டிகைக்கு, அரசு விடுமுறை விடப்படும். இந்நிலையில், இம்மாதம் 14ம் தேதி, மொகரம் பண்டிகையையொட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், முஸ்லிம் காலண்டர் அடிப்படையில், மொகரம் பண்டிகை, இம்மாதம் 15ம் தேதி வருவதால், அன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என, இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதை பரிசீலித்த தமிழக அரசு, இம்மாதம் 14ம் தேதிக்கு பதில், 15ம் தேதி, அரசு விடுமுறை நாளாக அறிவிப்பதாக, அரசாணை வெளியிட்டுள்ளது.
|