சத்தீஸ்கரில், உள்ளது மகாசமுந்த் மாவட்டம். இங்கு, அனைத்து உயர் பதவிகளிலும் பெண்கள்தான் உள்ளனர். மக்கள் இந்த மாவட்டத்தை, "பெண்கள் மாவட்டம்' என, அழைக்கிறார்கள்.
"மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பெண்களாகவே இருப்பதால், ஒருங்கிணைந்து செயல்பட முடிகிறது. எங்களுக்குள் கலந்து பேசி, அனைத்து நிர்வாக பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க முடிகிறது,'' என்கிறார், மாவட்ட கலெக்டர் சங்கீதா.
சங்கீதா (மாவட்ட ஆட்சியாளர்), அனுராதா கரே (மாவட்ட நீதிபதி), ஷிகா ராஜ்பூத் (மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி), நீது கமல்சிங் (மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்), நீது நோதானி (மாவட்ட கலால்வரித்துறை அதிகாரி ), இஸ்மத் ஜஹான்தானி (மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பிரயங்கா தாக்கூர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி), சரளா கோசரியா (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்) என, இம்மாவட்டத்தின் முக்கியமான பொறுப்புகளில் பெண்கள் பணி செய்கின்றனர்.
|