LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

சே குவேரா

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல , அது ஒரு பாடம் , ஒவ்வொருவரும்

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் . கற்றுக்கொண்டு

அதன் வழி நடக்க வேண்டிய ஒரு பாடம் .


சே குவேரா ( Che Guevara ) என்பவரின் புகைப்படத்துடன் கூடிய பனியன்களை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களும் , முற்போக்குவாதிகளும் அணிந்து கொள்வதை பெருமையாகக் கருதுகின்றனர் . கியூபா புரட்சியாளர்கள் சே என்று செல்லமாக அழைக்கின்றனர் . ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பினார் . எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா என்பது இவரின் பெயராகும் . இவர் 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அர்ஜென்டினாவில் பிறந்தார் . இவர் ஒரு சோசலிசப் புரட்சியாளர் , மருத்துவர் , மார்க்சியவாதி மற்றும் அரசியல்வாதி . கியூபா உள்பட பல நாடுகளின் புரட்சிகளில் பங்கு பெற்ற போராளி . மனிதர்களைத் துயரிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட மனிதர் . பூமியில் வாழ்ந்துசென்ற முழுமையான மாவீரன் என சே குவேராவைப் பலரும் புகழ்கின்றனர் .

கியூபாப் புரட்சியின்போது புதிய யுக்தியை அறிமுகப்படுத்தினார் . அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை நடுங்க வைத்த அந்த கொரில்லாப் போர்த்தந்திரம் தான் இன்றுவரை பல இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறது . அவர் கியூபாவில் 14 ஆண்டுகள் மத்திய வங்கியின் தலைவராக பணிபுரிந்தார் . பிறகு அனைத்து லத்தீன் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளாலும் , பொலிவியா படைகளினாலும் சதித்தனமான முறையில் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார் . கைதியாக அகப்பட்ட நேரத்தில்கூட மரணத்தை வரவேற்றார் . தன்னைக் கொல்ல வந்தவனைப் பார்த்ததும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் , பிறகு என்னைச் சுடு என்று கூறி எழுந்து நின்றார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.