ஆறாவது ஐபிஎல் தொடரின் 30 வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் டிராவிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்தது. அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வாட்சன் சதம் அடித்தார். பின்னர் 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
|