LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை புத்தக கண்காட்சியை ஜனவரி 4 -ந் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து விருது வழங்குகிறார்!

சென்னை புத்தக கண்காட்சியை ஜனவரி 4-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, சிறந்த பெண் எழுத்தாளர், பதிப்பாளர், சிறந்த விற்பனையாளர் விருதுகளையும் வழங்குகிறார்.

இது குறித்து ப.பா.சி தலைவர் வயிரவன், துணைத் தலைவர் மயில்வேலன், செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 

புத்தக பிரியர்கள் ஆர்வத்தோடும் ஆவலோடும் எதிர்பார்த்த 42-வது சென்னை புத்தக கண்காட்சி வரும் 4-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த புத்தக கண்காட்சி வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது. 

தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாட்களில் காலை11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. சென்னை புத்தக கண்காட்சி வரலாற்றிலேயே முதன்முதலாக 17 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 10 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பது சிறப்பு அம்சமாகும். 

சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நல்லி குப்புசாமி தலைமை வகிக்கிறார். இந்த ஆண்டு முதன்முதலாக சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் பெண் பதிப்பாளர் வனிதா பதிப்பகம் அம்சவேணி பெரியண்ணன் பெயரிலான விருது முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதிக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை முதல்வர் எடப்பாடி வழங்குகிறார்.

இந்த ஆண்டு சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பக செம்மல் கணபதி விருது, முல்லை பதிப்பகம் முல்லை பழனியப்பனுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான விருதான ஆர்.கே. நாராயண் விருது காயத்ரி பிரபுவுக்கும், சிறந்த விற்பனையாளருக்கான செம்மல் மெய்யப்பன் விருது ஹிக்கின்பாதம்ஸ் சந்திரசேகருக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ. வள்ளியப்பா விருது சபீதா ஜோசப்புக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பத்ரி செல்லப்பனார் விருது மறைந்த முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணனுக்கும் வழங்கப்படுகிறது.

820 அரங்குகளுடன் 420-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் புத்தக கண்காட்சி தொடங்குகிறது.இதில் சுற்றுச்சூழலுக்கேற்ப தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் கட்டிடத்துறை, உணவுத்துறை மற்றும் உடல்நலன், திரைப்படத் துறை, இசை சார்ந்த நூல்களுக்கான தனி அரங்குகளும் இடம்பெறுகின்றன. சாகித்ய அகாடமி, சென்னை பல்கலைக் கழகம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தேசிய புத்தக நிறுவனம், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பப்ளிகேசன் டிவிசன், உ.வோ.சா. நூல் நிலையம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் போன்ற அமைப்புகளும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பெங்குவின் நிறுவனத்தின் புத்ததங்களும் இடம்பெறுகின்றன.

இந்த ஆண்டு வாசகர்களை கவரும் வண்ணம் பிரம்மாண்டமான தமிழ் அன்னை உருவச்சிலை புத்தக காட்சி வளாகத்தில் நிறுவப்படுகிறது. இந்த சிலையை தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வரும் 5-ம் தேதி திறந்து வைக்கிறார்.

ப.பா.சி இணையதளத்திலும் bapasi.com கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டை வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன் கலந்து கொள்கிறார்.  தமிழன்னை திருவுருவத்தை பிரபலப்படுத்தி வரும் பேராசிரியர் ஆறு. அழகப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

by Mani Bharathi   on 01 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.