|
|||||
துவங்கியது சென்னை புத்தக கண்காட்சி !! |
|||||
37வது சென்னை புத்தக கண்காட்சி நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இந்த கண்காட்சியை எழுத்தாளர் மா.அரங்கநாதன் மகனும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஆர். மகாதேவன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 22 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
புத்தக கண்காட்சி அரங்கம் சுமார் 2 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. 777 அரங்குகளில் லட்சக் கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
புத்தக கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சியில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு கூடுதலாக 5 கோடி வரை விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
by Swathi on 10 Jan 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|