LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உயிரை கொடுத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்!

சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், ஓட்டுனர் பத்திரமாக பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு உயிரிழந்த சம்பவம் அப்பேருந்தில் பயணித்த பயணிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணி அளவில் 14 விமானப் பணிப்பெண்களுடன் தனியார் சொகுசுப் பேருந்து புறப்பட்டது. அப்பேருந்தை சென்னை புரசைவக்கத்தை சேர்ந்த சம்பத் ஓட்டி வந்தார். பரங்கிமலை நெடுஞ்சாலை அருகே பேருந்து வந்தபோது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஓட்டுனர் சம்பத், ஒரு கையினால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையினால் பேருந்து ஸ்டியரிங்கினை பிடித்து சமாளித்து ஆஸர்கானா வரை ஓட்டி, பத்திரமாக சாலை ஓரம் நிறுத்தினார். 

 

பேருந்து நின்றதும் ஓட்டுநர் சம்பத் திடீர் என நெஞ்சைப் பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பத் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சம்பத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சம்பத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பேருந்தில் பயணம் செய்த பயணிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

by Swathi   on 10 Oct 2013  0 Comments
Tags: மாரடைப்பு   பேருந்து ஓட்டுனர்   பேருந்து   Driver   Bus Driver   Sampath   Heartattack  
 தொடர்புடையவை-Related Articles
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது !! பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது !!
பறக்கும் விமானத்தில் மாரடைப்பால் விமானி சாவு !! விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயணி !!! பறக்கும் விமானத்தில் மாரடைப்பால் விமானி சாவு !! விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயணி !!!
உயிரை கொடுத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்! உயிரை கொடுத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.