சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் இன்று திறக்கப்பட்டது. இதை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். கடந்த 20 ஆண்டுகளாக, பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் இதை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று முதல் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் அனுமதி உண்டு. திறப்பு விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் இலவசமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.3, வெளிநாட்டினருக்கு ரூ.25 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, லிப்ட் வசதியுடன் கூடிய இந்த கலங்கரை விளக்கம், பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|