|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சென்னையில் திருவையாறு…. ஒரு கலாச்சாரத் திருவிழா. |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
"சென்னையில் திருவையாறு" பருவம் 14 மார்கழி மாத இசை விழாக்களில் தனித்துவமான அடையாளம் பெற்று சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சிறப்பு சேர்க்கும் விழாவாக விளங்குகிறது. மனம் மகிழ்ச்சியடைவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், தெய்வ வழிபாட்டுக்கும், தேச பக்திக்கும், கொள்கை முழக்கத்துக்கும், மக்களின் மனங்களை இணைப்பதற்கும் ஒரு பாலமாகவே இசை பயன்பட்டு வருகிறது. அந்த இசையைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அயராது பாடுபடும் இசைக் கலைஞர்களை கெளரவிக்கவும், அப்பணியை சிறப்புடன் செய்யும் பெரியோர்களை பெருமைப்படுத்தவும் ஒரு மிகச் சிறந்த மேடையை ”சென்னையில் திருவையாறு” சங்கீத நாட்டிய விழா அமைத்துத் தந்திருக்கிறது. அதனால் தான், ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மைல்களைக் கடந்து வேடந்தாங்கலை முற்றுகையிடும் பறவைகளைப் போல, இசை ரசிகர்களும் மார்கழி மாதத்தில் சென்னையை நோக்கிக் குவிந்து வருகிறார்கள். உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்து மகிழ்வதுடன் இந்த தெய்வீக அனுபவத்தையும் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் குடும்பம் குடும்பமாக நம் தேசத்திற்கு வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடக இசை என்றால் அது நமக்கில்லை என காததூரம் சென்ற காலம் மலையேறி, இன்று வீட்டுக்கு வீடு தங்கள் குழந்தைகளை சாஸ்திரீய சங்கீதப் பயிற்சியில் சேர்த்து விடுவதைப் பார்க்க முடிகிறது. வீடுதோறும் ஒரு இசைக் கருவியை அலங்கார கலைப் பொருளாய் வைப்பதைப் பெருமையாக நினைக்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பட்டி தொட்டியெல்லாம் பிரம்மாண்ட சுவரொட்டி விளம்பரங்களில் கர்நாடக சங்கீதக் கலைஞர்களின் படங்கள் புன்னகைப்பதை இன்று பார்க்க முடிகிறது. நமது பாரம்பரிய இசை, நடனம், தெய்வீகப் பிரசங்க மரபுகள் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து, இந்த அற்புதமான கலை வடிவங்கள் கொஞ்சம், கொஞ்சமாக மங்கி வழக்கொழிந்து போய்விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில் தான், புது ரத்தமாய் புத்தொளியாய் வந்து, பெரும் இசைப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன இந்நிகழ்ச்சிகள். இசை மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். வாழ்க்கையின் அத்தனை நிலைகளிலும் அது இரண்டறக் கலந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் எத்தனை வகை. இருந்தாலும்… நாடு, இனம், மொழி என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து ஒருங்கிணைக்கும் சக்தி கொண்டதாக அது விளங்குகிறது. மழையைத் தருவிக்கவும், நோய் தீர்க்கும் அருமருந்தாக அமையவும் இசையால் முடியும் என்பது வெறும் வார்த்தை ஜாலமல்ல, சத்தியமான சாத்தியமான உண்மை என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகிறது. தொன்மையான நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும், கலைகளிலும் உலகத்திற்கே முன்னோடியான நமது இந்திய தேசத்தில் எண்ணற்ற அரிய கலைகள் தோன்றி மக்களை மகிழ்வித்து சென்றிருக்கின்றன. அவ்வாறாக தோன்றிய அருங்கலைகளில் இன்றும் உயிர்ப்போடு காண்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்துகின்ற ஒன்று என்று சொன்னால் தென்னிந்தியாவின் "கர்நாடக சங்கீதம்" என்பதை யாரும் மறுக்க இயலாது. அவ்வரிய கலைகளில் முக்கியமானதும் முதன்மையானதுமான கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில், புதிய பரிமாணத்தில் கடந்த பதிமூன்று வருடங்களாக "சென்னையில் திருவையாறு" என்கிற விழா "லஷ்மன் ஸ்ருதி இசையகம்" (Lakshman Sruthi Musicals) சார்பாக வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, இசைத்துறையில் வித்வத்தன்மை கொண்டோரையும், வித்தியாசமான ரசிப்புத்தன்மை கொண்டோரையும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும், அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும் தேர்வுக்குழுவாய் அமைத்து, எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான் "சென்னையில் திருவையாறு" விழா! எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொடங்குவது சுலபம், அதைத் தொடர்வது சிரமம். அதிலும் வெற்றிகரமாக 13 ஆண்டுகளை நிறைவு செய்து, சிறிதும் தொய்வின்றி 14 வது ஆண்டில் அடி வைத்திருப்பது மிகப் பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை. சகாப்த சாதனை மைல்கல்களை கடந்து உற்சாகமாக பயணிக்கிறது ”சென்னையில் திருவையாறு” என்ற இந்த சங்கீத நாட்டிய விழா. ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் "சென்னையில் திருவையாறு" இசைவிழா திகழ்கின்றது. இவ்வாண்டு இசைவிழாவிற்கு வயது 14. இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு ”எஸ்.ஜெயராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. "ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள்" “எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்கார் தியாகராஜர். எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள். இவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீ தியாகராஜர்” திகழ்கின்றார். இவர் இயற்றிய சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்” ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகமெங்கும் இசைக்கலைஞர்களால் இன்றும் பாடப்பட்டு வருகிறது. எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” செவி மடுத்துக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி அயல்நாட்டவரும் கூட தியாகராஜரின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர். எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் ”லஷ்மன் ஸ்ருதி”யின் சார்பாக உங்கள் பேராதரவுடன் ”சென்னையில்-திருவையாறு” என்ற வடிவத்தில் பதினான்காவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம். மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும் நிகழ்வே “சென்னையில் திருவையாறு”. பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டுவரும் ஒர் அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு” ”சென்னையில் திருவையாறு” துவக்க நாளான டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாபோல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியர், ஸ்ரீஅனுமன் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு சிறப்பு சாஸ்த்ரிய சம்பிரதாய பூஜையுடன் காண்பதற்கரிய வைபவமாக துவங்குகிறது. ஒரே மேடையில் ஐநூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர். பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். இந்நிகழ்வில் பங்கேற்கும் இசைக் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம், விழா துவங்கும் முன் வழங்கப்படும். பஞ்சரத்ன கீர்த்தனைகளை துல்லியமாக பாடும் குரல்வளம் பெற்றோரையும், இசைக்கும் திறமை பெற்றோரையும் இதில் கலந்து கொண்டு பாடுவதற்கு அன்போடு அழைக்கின்றோம். திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நேரில் சென்று காண இயலாத இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் “சென்னையில் திருவையாறு” துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கேட்டு இறைவனருள் பெற வேண்டுகிறோம். இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம் ! அனைவரும் வருக !
பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் வைபவம் நிறைவுற்றதும் சரியாக மாலை 4.45 மணிக்கு ”சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெறும். 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைக்கிறார். இசை ஆழ்வார் விருது துவக்க விழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும் ”சென்னையில் திருவையாறு” அமைப்பின் சார்பாக கர்நாடக சங்கீத மற்றும் நாட்டிய உலகின் தலைசிறந்த சாதனைக்கலைஞர் ஒருவருக்கு அவரது கலையுலக வாழ்நாள் சேவையையும் சாதனையையும் பாராட்டும் விதமாக "இசை ஆழ்வார்" என்ற கெளரவ விருதை தங்கப்பதக்கத்துடன் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. தவில் இசை என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் மங்கள இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. தவில் இசையில் சாதனைகள் பல செய்தவரும், இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணிக் இசைக் கலைஞர்களுடன் இணைந்து 'ஒருங்கிணைந்த வாத்திய இசை' நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ள ”பத்மஸ்ரீ ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்” அவர்களின் இசைச்சேவையைப் பாராட்டும் முகமாக "இசை ஆழ்வார்" பட்டம் வழங்கி கெளரவம் செய்யப்பட உள்ளது. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் திருவுருவ மெழுகுச்சிலை சென்னையில் திருவையாறு துவக்கவிழாவில் தனது மெல்லிசையால் நம் அனைவரது உள்ளங்களையும் ஆட்கொண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை கெளரவிக்கும் வகையில் லண்டன் வேக்ஸ் மியூசியத்தில் உள்ளதைப்போல் தத்ரூபமான மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது. ”பத்மபூஷண் அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி” அவர்கள் அன்னாரது சிலையை திறந்து வைக்கிறார் உலகத் தரம் வாய்ந்த சிற்பக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்படும் இந்த மெழுகுச்சிலை பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வியப்பில் ஆழ்த்த உள்ளது. வளரும் இளம் கலைஞர்கள் மட்டுமல்லாது, தமிழ் இசையுலகில் இன்று நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் பிரபலங்களும் தங்களின் மானசீக குருவாக போற்றி வணங்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் திருவுருவ மெழுகுச் சிலையுடன் பொதுமக்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள காமராஜர் அரங்கின் நுழைவு மண்டபத்தில் வசதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ”பாரத ரத்னா” ஏ.பி.ஜே.அப்துல்கலாம், "பாரத ரத்னா" எம்.எஸ்.சுப்புலட்சுமி, "பாரத ரத்னா" எம்.ஜி.ஆர் மற்றும் ”பத்மவிபூஷண்” டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. துவக்க விழாவினைத் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் சுதா ராஜா, பியானோ அனில் ஸ்ரீனிவாசன், புல்லாங்குழல் சஷாங் குழவினரின் இசை நிகழ்ச்சியோடு ”சென்னையில் திருவையாறு” இசை நிகழ்வுகள் துவங்குகின்றன. தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் வாய்ப்பாட்டிசையுடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
19ஆம் தேதி முதல் தினமும் எட்டு நிகழ்ச்சிகள், காலை 7.00 மணிக்குத் துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெறும். கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையுலகின் மூத்த இசைக்கலைஞர்களும், வளர்ந்து வரும் திறமையாளர்களும், நாட்டியக் கலைஞர்களும் சேர்ந்து மொத்தம் அறுபது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். மேல்காணும் பட்டியலில் காணப்படும் அனைத்து கலைஞர்களும் ஒவ்வொரு விதமான வகையில் இவ்விழாவிற்காக மிக நுணுக்கமான வகையில் பயிற்சியும் முயற்சியும் செய்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர். காமராஜர் அரங்கத்தில் திருவையாறு தியாகராஜர் ஆராதனை மண்டபத்தை நம் கண்முன்னே கொண்டுவரும் வகையில் பிரமாண்டமான முறையில் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடை, பாடுவோர்க்கும், இசைப்போர்க்கும், நடனமாடுவோர்க்கும், நிகழ்ச்சியைக் காண்போர்க்கும் சந்தோஷமளிக்கும் வகையில் இருக்கும். அரங்கின் எல்லா பகுதிகளிலிருந்தும் இசைக்கருவிகளையும் பாடகர்களையும் நடனக்கலைஞர்களையும் அவர்களது திறமைகளை ரசிகர்கள் துல்லியமாகக் காணும் வகையில் மேடையின் இருபுறமும் அகன்ற திரைகள் அமைக்கப்படுகின்றன. அரங்கத்தின் எல்லா இடங்களிலும் சீராகக் கேட்கும் படியான செவிக்கினிய ஒலி அமைப்புக்கும், கண்கவர் ஒளி அமைப்புக்கும் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான இசை ரசிகர்கள் கண்டுகளிக்கும் ”சென்னையில் திருவையாறு” விழா நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ”ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுமையான மற்றும் புதிய தொழில் நுட்பத்துடன் பல்வேறு வகையான கேமராக்களுடன் ஜீ தமிழ் ஒளிப்பதிவாளர்கள் நிகழ்ச்சிகளை படம்பிடித்து ஜீ தமிழ் நேயர்களுக்கு விருந்தளிக்க உள்ளார்கள். டிக்கெட் விற்பனை : அனைத்து நிகழ்ச்சிகளையும் காண்பதற்கென தொடர் அனுமதிச்சீட்டும் (Season Ticket), தனித்தனியாக நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துக் காண்பதற்கான அனுமதிச்சீட்டும் (Individual Show Ticket) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் கீழ்காணும் இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இணையதளம் மூலமாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட இணையதளங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் விவரங்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள: 94999 08474 / 044 – 48562170, 044-44412345 www.chennaiyilthiruvaiyaru.com, email : ct@lakshmansruthi.com https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial
இலவச நிகழ்ச்சிகள் : தினமும் காலை 7.00 மணி, 8.30 மணி, 9.45 மணி, 11.00 மணி, பிற்பகல் 1.00 மணி, 2.45 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். மாலை 4.30 மணி, இரவு 7.15 ஆகிய காட்சிகளுக்கு மட்டும் டிக்கெட் விற்பனை உண்டு.
அரங்கிற்குள் வருகின்ற ரசிகர்கள், நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் அறிவுத்திறன் கேள்விக்கான பதிலை தங்கள் நுழைவுச் சீட்டில் குறிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எழுதி, அரங்கில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்ழ்ச்சியிலும் நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்களில் ஐந்து பேரை குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிகழ்வை வழங்கும் கலைஞரின் கரங்களால் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட அந்தக் கலைஞரே ரசிகர்களுக்குப் பரிசுகள் வழங்குவது சிறப்பம்சமாகும். ரசிகர்களை அதிசயிக்க வைக்கும் பரிசுகள் : நடைபெற உள்ள அறுபது காட்சிகளில், ஒவ்வொரு காட்சியின் நிறைவிலும் போத்தீஸ் நிறுவனத்தின் சார்பாக குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் ரசிகர் ஒருவருக்கு போத்தீஸின் சிறப்பு பரிசாக பட்டுப் புடவை ஒன்று வழங்கப்படும். சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு ரசிகருக்கும் சக்தி மசாலாவின் ஃபேமிலி பேக் (Family Pack) பரிசாக வ்ழங்கப்படும்
ரசிகர்களின் வசதிக்காக தினமும் இரவு 7.15 மணி காட்சி நிறைவுற்றதும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வசதியாக சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு காமராஜர் அரங்கத்திலிருந்து இரவு 9.30 மணிக்கு இலவசமாக பேருந்துகள் (Free Buses) இயக்கப்படும். இலவச பேருந்தில் செல்ல விரும்புவோர் தங்கள் பெயரையும், செல்ல வேண்டிய இடத்தையும், உடன் வருவோர் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு 98416 98512, 98416 98499 ஆகிய எண்களில் ஒன்றிற்கு எஸ்.எம்.எஸ் (SMS) அல்லது வாட்ஸ்அப் (Whatsapp) செய்து தங்கள் இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம். பேருந்துகள் உதவி : ஸ்ரீ பாக்யலஷ்மி டூர்ஸ் & டிராவல்ஸ். மேலும் விவரங்களுக்கு 044 - 4666 4666, www.sblt.co.in
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு காமராஜர் அரங்கத்தை ஒட்டியிருக்கும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காங்கிரஸ் மைதானத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விற்பனை அரங்குகள் : நாள்தோறும் பல ஆயிரம் பேர் கூடுவதால், அரங்கின் வெளி மண்டபத்தில் பல்வேறு விதமான விற்பனையரங்குகள் அமைக்கப்பட இருக்கின்றன. அவற்றில் இசைக்கருவிகள், கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், உணவுத் தயாரிப்பு தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி க்கள், சி.டி க்கள், ஆன்மிக புத்தகங்கள், பூஜை பொருட்கள், இசைக்கருவிகள் குறித்த புத்தகங்கள் கொண்ட அரங்குகளும் இடம் பெறுகின்றன. மேலும் பதிப்பகங்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் மையங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவன மையங்கள், சமூக சேவை மையங்கள், போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்பட இருக்கின்றன. உணவுத்திருவிழா : 2018, பருவம் - 8 ”சென்னையில் திருவையாறு” இசை விழாவுடன் உணவுத்திருவிழா எப்படி இணைந்தது ? ”செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்பர். ”சென்னையில் திருவையாறு” இசை விழாவில், ரசிகர்களின் செவிகளை திகட்டத் திகட்ட நிரப்பும் தேனினும் இனிய இசை விருந்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் காலை 7.00 மணிக்குத் துவங்கி இரவு 10.00 மணி வரை நடைபெறும் இடைவிடா இசை மழைக்கு இடையே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு காபி குடிக்க வேண்டும் என்றால் கூட காமராஜர் அரங்கில் இருந்து வெளியேறி, சாலையைக் கடந்து சிறிது தூரம் நடந்து, கடையைத் தேட வேண்டியிருக்கும். தரமான உணவகம் கண்டுபிடித்து சாப்பிட்டுத் திரும்புவதற்குள், போதும் போதுமென்றாகிவிடும். ரசிகர்களின் செவிக்கு பல்வேறு இசை வடிவங்கள் கேட்கக் கிடைப்பது போல், வயிற்றுக்கும் பல்வேறு உணவு வகைகள் கிடைத்தால் ஏராளமான ரசிகர்கள் விழாவுக்கு வருவார்கள் என்ற நோக்கத்தில் உணவுத்திருவிழாவினை வடிவமைத்தோம். குறிப்பாக இந்த ஏற்பாடு வெளிநாட்டு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
உணவுத்திருவிழாவின் நுழைவு வாயிலில் ரசிகர்களை பரவசப்படுத்தவும் குழந்தைகளை மகிழ்விக்கவும் 14.5” அடி நீளத்தில் 5.5” அடி அகலத்தில் 5” அடி உயரத்தில் முழுக்க முழுக்க சாக்லேட்டினால் ஆன கார் வடிவமைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு உணவுத்திருவிழாவின் சிறப்பம்சமாக மாடித்தோட்டம் வடிவமைத்தல், பராமரித்தல், அவற்றிற்கான உபகரணங்கள், விதை, உரம் மற்றும் மூலிகை செடிகள் வளர்ப்பு போன்ற அனைத்து விவரங்களையும் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் நேரிலேயே செய்முறை விளக்கம் அளிக்க உள்ளார்கள். ஐம்பதாயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் பிரமாண்டமான அரங்கத்திற்குள் தமிழகத்தின் முன்னணி உணவகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு அரங்கங்களும், 300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான வசதிகளும் செய்யப்படுகின்றன. பசியாற்றும் உணவகங்கள் மட்டுமே என்றில்லாமல், உணவுத்திருவிழாவின் ஒரு பகுதியில் தனி மேடை அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த சமையல்கலை வல்லுநர்களின் அனுபவங்கள், பிரபல சமையல் கலைஞர்கள் மற்றும் உணவுக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் செயல் விளக்க நிகழ்ச்சிகள், பார்வையாளர்களும் பங்கேற்று தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சமையல் கலைப்போட்டிகள், ஒவ்வொரு போட்டியிலும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள், உடல் ஆரோக்கியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவுகள், நாள் முழுக்க நடக்கும் உணவுத் திருவிழாவின் இடையே மேடைக்கும் உணவரங்கங்களுக்கும் வந்து செல்லும் இசையுலக ஜாம்பவான்கள், திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சமூகத்தின் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள், ஆகியோர் அனைவரையும் அருகில் கண்டு பேசி மகிழும் வாய்ப்பு, சிறுவர்களுக்குண்டான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விளையாடுவதற்கான வசதிகள், குழந்தைகளோடு வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த சிறுவர்களைக் கவரும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் வித்தியாசமான கலைப்படைப்புகளையும், சிற்பங்களையும் செதுக்கும் அரங்குகள், நிபுணர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் என்று பல வித்தியாசமான ஏற்பாடுகள் இந்த உணவுத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக அணிவகுக்கின்றன. அதேபோல் உணவுத்திருவிழாவினை மட்டுமே காண வருவோர் காமராஜர் அரங்கத்திற்கு உள்ளே என்ன நடக்கின்றதென்று எட்டிப் பார்க்கின்ற வேளையில், சங்கீதத்தில் நீந்துகின்ற வாய்ப்பு ஏற்படும். கர்நாடக இசையில் ஆர்வமில்லாதோரும் சற்று நேரம் அதைக் கேட்கும் தருணத்தில் தங்களை மறந்து அதில் லயிக்க ஆரம்பிப்பர். அதுதான் நம் மண்ணின் இசைக்கான மகத்துவம். இசைவிழாவிற்கு புதுப்புது ரசிகர்கள் வரத்துவங்குவர். இதன் மூலம் நமது பாரம்பரிய இசை பல திசைகளுக்கும் பரவும் வாய்ப்பு உண்டாகும். கடந்த வருடங்களில் இப்படி வருகை தந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இசை விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வர ஆரம்பித்துவிட்டார்கள். முதியவர்களுக்கு முதல் மரியாதை : இந்த இசை விழாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக, முதியவர்களுக்கு மரியாதை செய்யப்படுவது சிறப்பம்சம். சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து தினந்தோறும் 500 மூத்த குடிமக்கள் தனி பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு, காலை 7.00 மணிக்கு நடைபெறும் நாம சங்கீர்த்தனம், உபன்யாசம், பக்தி பிரசங்கம் போன்ற நிகழ்ச்சிகளை இலவசமாகக் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு திரும்புகின்ற பொழுது அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காபி வழங்குவதுடன் அத்தியாவசியப் பொருட்கள், ஆன்மிக புத்தகங்களின் குறிப்பேடுகள், முதலுதவி உபகரணங்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைத்துண்டு, குளிருக்கான ஆடைகள், பேனா, தொலைபேசிக் குறிப்புப் புத்தகங்கள் ஆகியன அடங்கிய விசேஷ கைப்பை ஒன்றும் வழங்கப்படுகிறது. நமது கர்நாடக இசையின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு, உலகின் எந்தவொரு இசைக்கும் நமது மண்ணின் சங்கீதம் குறைந்ததில்லை என்பதை பறைசாற்றும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய தாங்கள், இச்செய்திக் குறிப்புகளை உலகெங்கும் பரவிக் கிடக்கும் இசை ரசிகர்களை சென்றடைய ஆவன செய்து உதவிடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். லஷ்மன் ஸ்ருதி நிறுவனம் - ஒரு சிறு குறிப்பு : ’லஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழு எனும் இந்த நிறுவனத்தை 1987ஆம் ஆண்டு முதல் 32 வது வருடமாக நடத்தி வருகின்றோம். எங்கள் இசைக்குழு 10,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்தியிருக்கிறது. 1994 ஆம் ஆண்டு ”36 மணி நேரம் தொடர் இசை நிகழ்ச்சி” என்ற உலக சாதனை இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினோம். தமிழர்கள் அதிகமாய் வசிக்கின்ற நாடுகளுக்கெல்லாம் சென்று இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளோம். லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் எமது குழுவின் சார்பாக 2003 ஆம் ஆண்டு இசைக்கருவிகள் விற்பனை செய்வதற்காக ”லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ்” என்ற பெயரில் புதிய பாதையில் தடம் பதித்தது. இந்த இசை வளாகத்தில் இசைக்கருவிகள், சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், இசை சம்பந்தமான புத்தகங்கள், நாட்டிய சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் இசைக்கலையுடன் உருவாக்கப்பட்டுள்ள பரிசுப்பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எங்கள் இசை வளாகத்தில்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும், இசை நடனம் மற்றும் பல்வேறு துறை ஆராய்ச்சியாளர்களுக்காகவும், திரைப்படத் துறையினரின் ஒலிப்பதிவு மற்றும் படப்பிடிப்புக்காகவும் இசைக்கருவிகளை வாடகைக்கு வழங்கும் பிரிவு (Rental Division) லஷ்மன்ஸ்ருதி.காம் (www.lakshmansruthi.com) என்கிற இணையதளம், இசை ரசிகர்களுக்கான தகவல்களை வாரி வழங்கும் வகையில் இயங்கி வருகின்றன.
‘சென்னையில் திருவையாறு’ என்கிற பெயர் தற்போது உலகெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் தென்னிந்திய பாரம்பரிய இசை சார்ந்தோர் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இந்த இசைவிழா ஏன் இப்பெயரில் நடத்தப்பட்டு வருகின்றது?, எப்படி வடிவமைக்கப்பட்டது ? என்பதற்கான ஒரு சிறு விளக்கமே இந்த அறிமுகம். ”லஷ்மன் ஸ்ருதி இசையகம்” (Lakshman Sruthi Musicals) சார்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு கர்நாடக சங்கீத விழாவை நடத்த ஆலோசனை செய்தபோது, தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்களிலிருந்து சற்றே வித்தியாசமாகவும், தனித்துவத்துடனும் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்த விழாவின் துவக்கமே புதியதாய், நமது கலாச்சாரத்துடன் ஒட்டியதாய், அனைவரது மனமும் இசையோடு ஒன்றி, அமைதியும் ஆனந்தமும் பெறுகின்ற வகையில் அமைய வேண்டும் என்று சிந்தித்தோம். திருவையாறு தியாகராஜரின் ஸ்தலத்தில் வருடந்தோறும் இசைக்கலைஞர்கள் ஒன்றுகூடி, அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை தெய்வீக உணர்வோடு பாடுகிறார்கள். அந்த இனிய உணர்வுமிக்க இசை அலையை ஏன் சென்னைக்குக் கொண்டு வரக்கூடாது என்று எங்களுக்குள் விவாதித்தோம். அப்போது திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே ஒரு விழாவை சென்னை மக்கள் கண்டுகளிக்கும்படி உருவாக்க எண்ணினோம். இதன் விளைவாகவே ஶ்ரீதியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு இசை விழாவைத் துவங்குவதென்றும், அந்த விழாவுக்கு "சென்னையில்-திருவையாறு" என்று பெயர் சூட்டுவதென்றும் முடிவு செய்தோம். மார்கழியும் இசையும் இப்போது மார்கழி மாதத்துக்கும் இசைக்குமான தொடர்பையும், ‘சென்னையில் திருவையாறு' விழா எப்படி துவங்கப்படுகிறது என்பதையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்…
சுருங்கச் சொன்னால் கடவுளைக் காணவும் அடையவும் இசை ஒன்றுதான் வழி. இசைக்கு திசையில்லை, தேசமில்லை, மொழியில்லை, மதமில்லை, சாதியில்லை, பேதமில்லை, நிறமில்லை. இசை மட்டுமே ஒருமை நிலையை உருவாக்கக்கூடியது. எந்த ஒரு நிர்ப்பந்தமுமின்றி இயற்கையாய் எல்லோர் மனதையும் சென்றடைவது இசையே. இயற்கை என்பது நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை. இந்த ஐம்பெரும் சக்திகளையும் அடக்கி ஆளக்கூடிய வல்லமை படைத்தது இசை என்றால் அது மிகையாகாது. உலகின் பொது மொழி என்பது மௌனமாகப் பேசப்படும் சைகை மொழி. அதையடுத்து பொதுவான மொழியென்றால் அது இசை ஒன்றே. இயற்கை அமைப்புகளுக்கு இறைவன் 'பருவம்' என்ற ஒரு குறிப்பிட்ட காலத்தை உருவாக்கினான். அதன்படி சில பருவத்தில் மட்டுமே பூக்கும் மலர், பெய்யும் மழை, வீசும் காற்று, கொட்டும் பனி, விளையும் பயிர்கள் என படைத்துள்ளான். அதுபோல் இறைவன் இசைக்கென்றும் ஒரு பருவத்தைப் படைத்திருக்கின்றான். அதுவே மார்கழி. மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். இந்த மாதத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படும் மாதம். பகவத் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி'' என்று கிருஷ்ண பரமாத்மாவே குறிப்பிடும் மாதம். தில்லையில் நடராஜர் நடனம் புரிந்த திருவாதிரைத் திருநாள் இடம்பெறும் மாதம் திருவெம்பாவையை மாணிக்கவாசர் அருளிய மாதம். மனுக்குலம் தழைக்க இப்பூவுலகில் மாமரிச்செல்வனாம் இயேசுபிரான் அவதரித்த மாதம். ஹரி நாமசங்கீர்த்தனம் எனும் புனைப்பாடல்களைப் பலர் ஒன்றுகூடிப் பாடும் மாதம். வாசலில் வண்ண வண்ணக் கோலங்களிடும் மாதம். கோவில் கோபுரங்களில் மணியோசைகள் தொடர்ந்திடும் மாதம். ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் இடைவிடாது நடக்கும் மாதம். இப்படி எத்தனையோ சிறப்புகள் சேர்ந்ததுதான் மார்கழி. அப்படிப்பட்ட மார்கழி மாதத்தையும், இயற்கையை அரவணைத்து வெற்றி கொள்ளும் இசையையும் இணைப்பதே மார்கழி இசை விழா. அதுவே தியாகராஜர் ஆராதனை விழா இதனை சென்னையில் நடத்தி திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு பெருமை சேர்ப்பதே சென்னையில் திருவையாறு எனும் சங்கீத நாட்டிய விழா. ”சென்னையில் திருவையாறு” சங்கீத நாட்டிய விழாவின் ஆதரவாளர்கள்: மெயின் – ஸ்பான்சர் :
சேனல் பார்ட்னர் : ஜீ தமிழ்
டைமன் ஸ்பான்சர் :
பிரிண்ட் & டிஜிட்டல் பார்ட்னர் :
பிரஸ் பார்ட்னர் :
கோல்டு ஸ்பான்சர் :
மீடியா ஸ்பான்சர் :
அஃபீஷியல் பி ஆர் ஓ
பவர்ட் பை:
சாக்லேட் கார் ஸ்பான்சர்
உணவுத் திருவிழாவிற்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
இந்த செய்திக் குறிப்பினை கீழ்க்கண்ட இணையதளத்தில் download செய்துகொள்ளலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Dear friends from the press and media, On behalf of Lakshman Sruthi we wish to extend our heartfelt greetings and welcome you all for this wonderful event. In the month of December, the iconic, magnificent and fulfilling ‘Chennaiyil Thiruvaiyaru’ music and dance festival, a landmark event is being conducted in chennai city. Lakshman Sruthi Musicals has been conducting this event for the benefit of the rasikas at Kamarajar Arangam from December 18th - 25th every year. In this astonishing 14th season, top notch performances by leading Carnatic and Hindustani stalwarts, legends, upcoming talents, musicians, dancers and discoursers have been scheduled to amaze you and take your breath away, with 60 enchanting shows from 7:00 AM to 10:00 PM daily. For Chennaiyil Thiruvaiyaru, 2018 is landmark indeed, as we step into our second decade aspiring to impact the growth of the art in the coming years. Chennaiyil Thiruvaiyaru Season -14 is about to begin on 18th December in Kamarajar Arangam by 11.00 AM with S. Jayaraman's Nadhaswaram performance, followed by the rendition of Pancharathna Kritis. This divine event will be participated by all leading singers and musicians on stage. Elaborate arrangements have been made for some 500 plus artists to participate in this ensemble on dais. Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru Edappadi K. Palanisamy will inaugurate the 14th edition of ”Chennaiyil Thiruvaiyaru” on 18.12.2018 Tuesday, 4.45 p.m. A Brief Introduction about Chennaiyil Thiruvaiyaru All over the World , Tamil people as well as those who are associated with Carnatic Music are familiar with Chennaiyil Thiruvaiyaru..In 2005, we thought of conducting a music concert on behalf of Lakshman Sruthi Musicals and we wanted the event to be unique and different from others. Every year, all artists associated with Carnatic music assemble in Thiruvaiyaru and sing Thiyagarajar’s divine Pancharathna Keertanas soulfully. Why not we bring that the same ambience to Chennai, we contemplated. It was our decision to recreate that event and begin our music series with the Thyagaraja Aradhana in Chennai. Hence we named our event "Chennaiyil Thiruvaiyaru ". A quick recap of the association between the month of Margazhi and music, • Music is the Divine’s language In other words, music is the means to experience and attain the divine. Music is beyond directions, countries, language, race, religion, or caste differences. It unites all. It touches hearts without any conditions attached. It is not an exaggeration to say that music has the power to overpower the five elements of air, water, fire, earth and ether. Next to sign language, music is a language understood by all. What is special about the month of Margazhi? God has created different seasons for different natural phenomena. Only during specific months do the flowers bloom, rains fall, winds blow, snow falls and crops grow. The season for music is Margazhi. Margazhi is said to be the king among months. Some of the highlights of this month are: • Thiruppavai composed by Andal is sung during this month Among his compositions, the Pancharatna Kritis are considered jewels. He has composed five songs in praise of his much-loved Lord Rama in five heavy ragas of Nattai, Gowlai, Aarabi, Varaali and Sree, which is sung by Carnatic musicians all over the world. Not just vocalists, but instrumentalists too play this with great enthusiasm. On close observation ,we can see that many of these compositions in the heavy ragas are also played by classical musicians from the north as well as the west, because of which appreciation of Carnatic music is increasing among foreigners. It is a matter of pride for every artist that the appreciation for these kritis crosses all boundaries. Such popular Pancharathna Kritis are performed every year in the divine land of Thiruvaiyar during the well known Thyagaraja Aradhana festival. Why & How "Chennaiyil Thiruvaiyaru" happened ! It is surprising but true that whether one is knowledgeable or not, all celebrate this Thyagaraja Aradhana festival with enthusiasm. Indeed, they are blessed who can listen in person to the artists from all directions coming and performing in the Thyagaraja Aradhana festival. Many music lovers make it a point to come from different part of country to be a part of this festival. With the blessings of the Music Trinity, we wish to hold 'Chennaiyil Thiruvaiyaru' for the 14th Year in succession to the great happiness of musicians and rasikas alike. Chennaiyil Thiruvaiyaru brings the divinity of the Tanjore soil to Chennai, not only for the enthusiasts in the city but in all states of all countries. Regardless of age, gender and status as an artist, vocalists and instrumentalists are going to bring the glory of Thiruvaiyaru festival in front of our eyes. All participants as well as the audience will be provided a booklet containing the five kritis to facilitate their joining in as well as enjoy the concert. A life time achievement Award a Citation with Gold Medal “Isaiyazhwar” title was instituted by Chennaiyil Thiruvaiyaru organizing committee in the year 2014 and presented to Nadhaswaram Exponent Shri. Thiruvizha Jayasankar - 2014, Violin Maestro Padmashree A.Kanyakumari - 2015, Violin Legend Padmabhushan L.Subramanian - 2016 and Mirudhnagam Maestro Padmavibhushan Shri. Umayalpuram Sivaraman - 2017 Thavil Maestro Padmashri Shri. A.K. Palanivel will be receiving the prestigious “Isaiyazhwar" award for this year from our esteemed Chief Guest - Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru Edappadi K. Palanisamy - on the inaugural day, for his life time achievements and contribution to classical music . Tribute to "Mellisai Mannar" M.S. Viswanathan In the memory of "Mellisai Mannar" M.S. Viswanathan ,we will be attributing a wax statue of "Mellisai Mannar" M.S. Viswanathan in the premises of Kamarajar Arangam for 8 days. This statue will be designed and sculptured to perfection as statues in Madame Tussauds wax museum, London. Students and the public will be allowed to visit and take pictures with the Statue and pay tributes to their ever inspirational legend. The Statue will be unveil by 'Padma Bhushan' Abinaya Saraswathi Smt.Saroja Devi. This will be followed by vocal by Carnatic Choir Sudha Raja along with Anil Srinivasan - Piano and Flute by Shashank at 6.00 pm. From December 19th onwards, there will be 8 concerts conducted every day, starting from 7 in the morning to 10 in the night. Free Bus Drop: After the last show of the day, around 9.45 PM, 12 free buses will be operated from Kamarajar Arangam to major parts of the city for the convenience of rasikas to return back to their houses safely. The routes are Sholinganallur, Thiruvanmiyur, Medavakkam, Tambaram, Kundrathur, Poonamalle, Avadi, Red hills, Thiruvotriyur, Parrys, Perambur, Mylapore and other areas. Programme Schelude for Season 14 of Chennaiyil Thiruvaiyaru
There will be 60 programs by senior and upcoming Carnatic, Hindustani musicians and classical dancers. The artists listed above have prepared and trained to present something unique and appealing for this event. Kamarajar Arangam has also been decorated uniquely to create an authentic Thiruvaiyaru experience. It will be pleasing to the performing artists as well as the audience equally. A senior artist will be part of every event and honour the performers. The audio and lighting systems have been spruced up and two large digital screens will be placed next to the stage so that the performance can be seen more clearly by the audience throughout the auditorium. Astounding bumper prizes: One Pothys Silk saree will be given to every rasika who is selected from lucky draw contest in every show One Sakthi Masala Family Pack will be given to every rasika who is selected from lucky draw contest in every show This year, the concerts will be recorded and telecasted in Zee Tamil Television. The invitations have been printed in a colourful manner to honour the artists better. For further details Please contact : 94999 08474, 044-48562170, 044-44412345 For more details : www.chennaiyilthiruvaiyaru.com https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial Mail ID : ct@lakshmansruthi.com The nearby Congress Grounds has been hired to accommodate thousands of two and four wheelers for hassle free parking. Advertisement campaign is placed in all leading Press, TV, Radio and Websites. Food Festival-2018 This is another unique feature of the Chennaiyil Thiruvaiyaru music festival – the Food Festival. There is no dearth of variety food throughout musical festiwal. For rasikas who spend an entire day starting from morning 7 to night 10 at the venue, providing good quality food to the rasikas is also our responsibility. Also, usually at other venues, rasikas are compelled to have the same kind of food day in and day out due to the presence of one vendor. But just like there is variety in arts, Chennaiyil Thiruvaiyaru will also provide variety of food to cater to different tastes. This food festival has been conducted for the last thirteen years. More than 100 food vendors will put up their stalls and more than 300 people can sit and eat comfortably at any point. Mega Chocolate Car Display: Special attraction of 14.5 feet length, 5.5 feet width and 5 feet height size of astonishing chocolate car will be erected at the food court entrance. The professionals from agriculture field will be present there to discuss and clear your doubts and discuss about organic herbal roof top garden. In addition to providing several food varieties, leading chefs will also conduct workshops for catering students. There will also be cookery competitions for the general public who can win attractive prizes. Tips on healthy eating will also be part of the show. The public can also interact with celebrities from various fields during the food show. Attractions for children has also been taken care of. Favourite foods of children will also be available at the food festival. Food art like vegetable carvings & ice sculpture will be in display. Chennaiyil Thiruvaiyaru 2018, would be an experience of unique music renderings in tandem with an exclusive food bonanza! Honouring senior citizens: As a special gesture, this year we have invited some 500 inmates of old age homes in and around Chennai for the 7.00 am show every day. So that these distinguished senior citizens could enjoy the divine programs like Nama Sangeerthnam, Upanyasam and Devotional discourses and have a great unforgettable outing of their life. To enable this, we have made elaborate arrangements which includes free transportation, breakfast, coffee & tea. A gift pack will also be presented to them with some essential drugs, soap, comb, mirror, towel, note, pen, first aid kit etc., We request you all to spread this news and give due coverage to this year’s Chennaiyil Thiruvaiyaru music festival to make it a grand success and expecting your kind co-operation in this regard. Chennaiyil Thiruvaiyaru Organising Committee, The Organizers - Lakshman Sruthi They have the distinction of having given over 8000 live music performances in the past 30 years. They also hold the record for non-stop 36 hours music show, thus endearing themselves to the Tamils all over the world. Lakshman Sruthi Musicals, the music super market promoted by them, sells musical instruments, music cassettes, CDs, DVDs, books on music, music related gift items etc. They also run a rehearsal studio, a music school, a service center for musical instruments. They also rent out music instruments for movie recordings and film shootings.aficionado of all kinds of music. Visit this establishment regularly for all their requirements. Chennaiyil Thiruvaiyaru 2018 Sponsors : Pothys "Parampara Pattu"presents Lakshman Sruthi in "Chennaiyil Thiruvaiyaru" Main Sponsor
Channel Partner
Co Presented by
Diamond Sponsors:
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
by Swathi on 13 Dec 2018 0 Comments | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|