கையெழுத்து வேறுபாட்டால் செக் ரிட்டர்ன் ஆனால் அதை கொடுத்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு போடலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.காசோலை தொடர்பான வழக்கு ஒன்றிற்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு ஒன்றில் உச்சநீதி மன்றம் கூறியதாவது,கையெழுத்து வேறுபாட்டால் காசோலை ரிட்டர்ன் செய்யப்பட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படும். இதற்காக வழக்கு தொடருவதற்கு முன், காசோலை ரிட்டர்ன் ஆனது பற்றி காசோலை தந்தவருக்கு தகவல் தரப்பட்டு பணத்தை தர அவருக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தர வேண்டும்.காசோலை வழங்கியவர் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகும் பணத்தை தரவில்லை என்றால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரலாம். என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
|