சத்தீஸ்கர் மாநில அரசு அமல்படுத்துயுள்ள பொது விநியோக திட்டத்திற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை பின்பற்றுமாறு, 30 நாடுகளுக்கு உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில அரசு, மக்களின் நலனுக்காக, பல நல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இந்த வகையில் சத்தீஸ்கர் மாநில அரசு, ரேஷன் பொருட்கள் விநியோகத்திலும், ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே, ரேஷன் பொருட்களை பெற முடியும் என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. குடும்ப அட்டை வைத்துள்ள யாரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும், பொருட்களை வாங்கலாம். இந்த புதிய முறையால், பொதுமக்களின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் நிலை மாறியுள்ளதாகவும், சத்தீஸ்கர் மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
|