|
|||||
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 107 ஆண்டுகளாக எவ்வித குற்ற சம்பவங்களும் அரங்கேறாத ஒரு அதிசய கிராமம் !! |
|||||
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 107 ஆண்டுகளாக எவ்வித குற்ற சம்பவங்களும் அரங்கேறாத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் உள்ளது, பூல்ஜர் கிராமம். இந்த கிராமத்தில், 107 ஆண்டுகளாக, இங்குள்ள காவல் நிலையத்திற்கு, அக்கிராம மக்களிடமிருந்து ஒரு புகார் கூட வந்தது இல்லையாம்.
திருட்டு பயம், பாலியல் வன்முறைகள் கிடையாது :
பூல்ஜர் கிராமத்தில் குற்றங்களே நடைபெறுவதில்லை. கிராமத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்குள் பாகுபாடு இன்றி வசிப்பதால், ஜாதி, மதக் கலவரங்கள் ஏற்பட்டதில்லை. பெண்கள் சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர்; யாரும் பலாத்காரம் செய்யப்பட்டது கிடையாது. திருடர்களின் பயம் அறியாததால், திருட்டு என்பதையே இக்கிராம மக்களுக்கு தெரியாமல் உள்ளது.
தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளை, கிராம சபை முன் வைக்கின்றனர். அங்கு சமரசமான முடிவு எட்டப்படுவதால், எந்த தரப்பினரும் அதிருப்தி அடைவதில்லை. கிராம சபையின் முடிவை எதிர்த்து, இதுவரை யாரும் காவல் நிலையம் சென்று புகார் அளித்தது கிடையாது.
பூல்ஜர் கிராமம் குறித்து, அக்கிரமத்திற்கான காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, பூல்ஜர் கிராம மக்கள், இதுவரை எவ்வித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட்டது கிடையாது. கோர்பா காவல் நிலையத்திற்கு உட்பட்ட, அனைத்து கிராமங்களிலும், குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், பூல்ஜர் கிராம மக்கள், விதிவிலக்காக உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளுக்காக, மாநில அரசு இந்த கிராமத்தை சிறந்த கிராமமாக அறிவித்து, விருது வழங்கியுள்ளது என அவர் பூல்ஜர் கிராமத்தைப் பற்றி பெருமையாக கூறினார். |
|||||
by Swathi on 28 Jan 2014 0 Comments | |||||
Tags: Chhattisgarh Village Chhattisgarh Village Raipur Village Crime 107 Years Raipur 107 Years அதிசய கிராமம் இந்திய கிராமம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|