|
|||||
முதல்வர் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! |
|||||
தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும், 2 லட்சம் காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை 5 லட்சமாக உயர்த்தி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 26.96 லட்சம் பேர் 5,133.33 கோடி ரூபாய் அளவிற்கு பயன் அடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன். அதன்படி, 1.12.2018-லிருந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 01 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|