LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிச்சை புகினும் கற்கை நன்றே!

கற்கை நன்றே; கற்கை நன்றே; 
பிச்சை புகினும் கற்கை நன்றே

என்கிறது வெற்றி வேற்கை. பிச்சை எடுத்தாவது கல்வி கற்கலாம் என்பதே இதன் பொருள். பிச்சை எடுத்தே கல்வி கற்கும் ஒரு சிறுவன் இதற்கு உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றான். மற்றவர்களுக்குப் பாடமாகவும் விளங்கி வருகின்றான்.  

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் கஸ்ராலி பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  இவர்களின் ஒரு மகனான பவன் கிஷாங்கிர் தேவடே (வயது 15) பிலோலி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.

பவனின் பெற்றோர் பிச்சை எடுப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அவர்கள் வருமானம் குடும்பம் நடத்தவே போதுமானதாக இல்லை.  இதனால் பவனின் கல்விக்கான செலவுகளை அவர்களால் கவனிக்க முடியவில்லை.

மற்ற குழந்தைகள் போல் இல்லாமல்  பவன் தனது குடும்பத்தினரின் செலவுகளுக்காக பஸ் நிலையத்திற்கு சென்று பிச்சை எடுத்து வருகிறான்.

இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும்  பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு, பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளிடம் கையில் உள்ள கிண்ணத்தை நீட்டிப் பிச்சை கேட்கிறான்.

பள்ளிச்சீருடையில் இருக்கும் பவனுக்கு உதவி செய்யும் விதத்தில் அவர்கள் ரூபாய்.1 அல்லது  2 என பிச்சை இடுகின்றனர்.

குடும்பச் செலவுகளுக்கும், படிப்புச் செலவுகளுக்கும் இது போதுமானதாக இல்லாததால்,  பிற பொது இடங்களுக்கும் சென்று பவன் பிச்சை எடுத்து வருகிறான்.

"பவன் வகுப்பில் நன்றாகப் படிப்பவன்.  ஆனால் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கு போதிய வசதி அவனிடமில்லை" என பவனின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதுபற்றி பவன் கூறும்போது,  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிச்சை எடுப்பதில் 200 ரூபாய் கிடைக்கிறது.  குடும்பத்தில் வசதியே இல்லாவிட்டாலும் தொடர்ந்து பிச்சை எடுத்தே முழுவதும் படித்து முடிக்க தீர்மானித்துள்ளேன்" என கூறியுள்ளான்.

பிச்சை எடுத்தாவது நன்றாகப் படித்து முடிப்பேன் என்று கூறும் பவன் ஒரு முன்னுதாரணச் சிறுவனாக விளங்கி வருகின்றான்.

by Swathi   on 11 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
15-Nov-2020 02:51:30 Sebastian said : Report Abuse
Maharashtra eg. of a beggar boy managing his studies with his begging activity though was a shameful activity and brings shame to our country but still was very good very apt for the youngsters of his age as covid has put many family's out of gear. This idea helps many well to do to contribute generously towards the education of others. The former Chief Minsiter of Tamil Nadu Kamaraj said to the poor youth, I as a chief Minsiter will beg for you to get educated. What a great soul. Though he studied only up to 5th std. He knew the importance of education and he wanted everyone even the poorest students to learn and ocme up in life. He told the teachers I am giving you the poor youth to you to be educated but dont cheat them by getting work out of them. The words Karkai nadre is repeated three times gving importance to the education. Let us not make a big business out of it. The present government is making the education a business it has to think of implementation of NEP.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.