|
|||||
குழந்தைகளை உற்ச்சாகமாக்கும் எண்ணெய் குளியல் !! |
|||||
எண்ணெய் குளியலால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். ஒருசில குழந்தைகளின் தலை வடிவம் பிரசவ நேரங்களில் இஷ்டத்துக்கு இருக்கும். இப்படி இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், பிறந்த குழந்தைகளின் தலைப் பகுதியானது களிமண் பதம் போல மென்மையாகத்தான் இருக்கும். எனவே, எண்ணெய் வைத்து, கையால் குழந்தையின் தலையில் மென்மையாகத் தேய்த்து குளிப்பாட்டும்போது தலை வடிவத்துக்கு வந்துவிடும். கூடவே, இந்த எண்ணெய்க் குளியலால் முடி நன்றாக வளரத் தொடங்கும். தலையில் பேன், பொடுகு தொல்லை என்பதே இருக்காது. சுத்தம், ஆரோக்கியம், அழகு அத்தனையும் வந்து குடிகொண்டுவிடும்.
பிறந்த குழந்தைகளுக்கான எண்ணெய் குளியல் குறிப்பிகள் :
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும். முதல் 15 நாட்களுக்கு தேங்காய் எண்ணெயில் குளிப்பாட்டுங்கள். பிறகு வாரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மாற்றி மாற்றியும், மாதம் ஒரு முறை பாதாம் எண்ணெயையும் பயன்படுத்தலாம். குளிர் காலமாக இருந்தால் கடுகு எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் தேய்த்து குளிப் பாட்டினால், தோல் வறண்டு போகாமல், பளபளப்பாக இருக்கும். சளித் தொல்லை இருந்தால் 4 துளி வேப்ப எண்ணெயை நெஞ்சில் தடவி பிறகு குளிப்பாட்டினால், சளி, வீசிங் இருக்காது.
மண்டை கரப்பானை அகற்றும் வழிமுறைகள் :
பிரசவத்தின்போது பெண்களுக்கு சில ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் பிறக்கும் குழந்தைக்கு தலையில் கறுப்பு, மஞ்சள் நிறத்தில் திட்டுத் திட்டாக தோன்றும். இதனை மண்டை கரப்பான் என்பார்கள். மொட்டை அடிக்கும்போது இது தெரியும்.
இதற்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை.இதைப் போக்க வழிமுறைகல் இதோ, மிதமாக காய்ச்சிய எண்ணெயைத் தலையில் தேய்த்து சீப்பால் முகத்தில் படாமல் பின்புறமாக வாரி, பயத்தமாவால் அலச வேண்டும். சில நாட்களில் சரியானது போல் தோன்றினாலும், இந்த கரப்பான் திரும்பவும் வந்துவிடும். எனவே, தொடர்ந்து இதேபோல மிதமான சூட்டில் காய்ச்சிய எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும். ஐந்தே மாதத்தில் கரப்பான் முற்றிலும் உதிர்ந்து விடும். இதற்கு பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த எண்ணெய் திக்காக இருப்பதால் தலை கரப்பான் சீக்கிரமே காணாமல் போய்விடும்.
பேன் தொல்லை தீர்க்க :
குழந்தைகளின் முடிகளில் சிலசமயம் பேன்கள் வரும். இந்த பேன் காதோரம், புருவம் என முடி இருக்கும் பகுதிகளில் அதிகமாகப் பரவிவிடும். குழந்தைக்கு தலை அரிக்கும் போதெல்லாம் சொல்லத் தெரியாமல், அழுது கொண்டே இருக்கும். குழந்தைக் கென்றே இருக்கும் சின்ன சீப்பைக் கொண்டு முடியின் வேரிலிருந்து மேல் நோக்கி வாருங்கள். பிறகு, தலைக்கு குளிப்பாட்டி, வெள்ளை காட்டன் துணியால் லேசாகத் துடையுங்கள். பேன், ஈரத் துணியில் ஒட்டிக்கொள்ளும். பேன் தொல்லை தீரும். எண்ணெய் குளியலால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். ஒருசில குழந்தைகளின் தலை வடிவம் பிரசவ நேரங்களில் இஷ்டத்துக்கு இருக்கும். இப்படி இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், பிறந்த குழந்தைகளின் தலைப் பகுதியானது களிமண் பதம் போல மென்மையாகத்தான் இருக்கும். எனவே, எண்ணெய் வைத்து, கையால் குழந்தையின் தலையில் மென்மையாகத் தேய்த்து குளிப்பாட்டும்போது தலை வடிவத்துக்கு வந்துவிடும். கூடவே, இந்த எண்ணெய்க் குளியலால் முடி நன்றாக வளரத் தொடங்கும். தலையில் பேன், பொடுகு தொல்லை என்பதே இருக்காது. சுத்தம், ஆரோக்கியம், அழகு அத்தனையும் வந்து குடிகொண்டுவிடும்.
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும். முதல் 15 நாட்களுக்கு தேங்காய் எண்ணெயில் குளிப்பாட்டுங்கள். பிறகு வாரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மாற்றி மாற்றியும், மாதம் ஒரு முறை பாதாம் எண்ணெயையும் பயன்படுத்தலாம். குளிர் காலமாக இருந்தால் கடுகு எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் தேய்த்து குளிப் பாட்டினால், தோல் வறண்டு போகாமல், பளபளப்பாக இருக்கும். சளித் தொல்லை இருந்தால் 4 துளி வேப்ப எண்ணெயை நெஞ்சில் தடவி பிறகு குளிப்பாட்டினால், சளி, வீசிங் இருக்காது.
பெண் குழந்தை நடக்கும்வரை வாரம் ஒரு முறை உடம்பு முழுவதும் கடுகு எண்ணெய் தடவி, அதிகாலை வெயிலில் சில நிமிடங்கள் நிற்க வைத்து, குளிப் பாட்ட வேண்டும். இதனால், முகம் கன்னம், முதுகு பகுதிகளில் தேவை யற்ற முடிகள் உதிர்ந்து விடும். விட்டமின் சத்து கிடைப்பதுடன், எலும்பும் உறுதியாக இருக்கும்.குழந்தைக்கு ஒரு வயது வரை தலைக்குக் குளியல் சோப்பு போடுவது தவறு. பேபி ஷாம்பூ உபயோகிக்கலாம். அதைவிட, பயத்தம்பருப்பை அரைத்து சலித்து பயன்படுத்துவது மிக வும் நல்லது. குளிப்பாட்டியதும் சாம்பிராணி போடுவதால், சளி, இருமல் தொல்லை இல்லாமல் இருக்கும். குழந்தையும் நன்றாகத் தூங்கும்.ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றலாம். இரண்டு வயதுக்கு மேல் வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து நன்றாக ஊற வைத்து, பிறகு குளிப்பாட்ட வேண்டும்.
பிரசவத்தின்போது பெண்களுக்கு சில ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் பிறக்கும் குழந்தைக்கு தலையில் கறுப்பு, மஞ்சள் நிறத்தில் திட்டுத் திட்டாக தோன்றும். இதனை மண்டை கரப்பான் என்பார்கள். மொட்டை அடிக்கும்போது இது பளிச்சென்று தெரியும். இதற்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. இதைப் போக்க வழிமுறைகல் இதோ, மிதமாக காய்ச்சிய எண்ணெயைத் தலையில் தேய்த்து சீப்பால் முகத்தில் படாமல் பின்புறமாக வாரி, பயத்தமாவால் அலச வேண்டும். சில நாட்களில் சரியானது போல் தோன்றினாலும், இந்த கரப்பான் திரும்பவும் வந்துவிடும். எனவே, தொடர்ந்து இதேபோல மிதமான சூட்டில் காய்ச்சிய எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும்.
ஐந்தே மாதத்தில் கரப்பான் முற்றிலும் உதிர்ந்து விடும். இதற்கு பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த எண்ணெய் திக்காக இருப்பதால் தலை கரப்பான் சீக்கிரமே காணாமல் போய்விடும்.மிகவும் மிருதுவான குழந்தையின் முடியிலும் சிலசமயம் பேன்கள் வரும். இந்த பேன் காதோரம், புருவம் என முடி இருக்கும் பகுதிகளில் அதிகமாகப் பரவிவிடும். குழந்தைக்கு தலை அரிக்கும் போதெல்லாம் சொல்லத் தெரியாமல், அழுது கொண்டே இருக்கும். குழந்தைக் கென்றே இருக்கும் சின்ன சீப்பைக் கொண்டு முடியின் வேரிலிருந்து மேல் நோக்கி வாருங்கள். பிறகு, தலைக்கு குளிப்பாட்டி, வெள்ளை காட்டன் துணியால் லேசாகத் துடையுங்கள். பேன், ஈரத் துணியில் ஒட்டிக்கொள்ளும். பேன் தொல்லை தீரும்.
|
|||||
by Swathi on 23 Jun 2014 0 Comments | |||||
Tags: Children Health Tips Baby Oil Bath Tips குழந்தைகள் | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|