கடந்த 20 நாட்களாக ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில் முகாமிட்டிருந்த சீன ராணுவம் நேற்று திடீர் என்று வாபஸ் ஆனது. இதனால் அங்கு நிலவி வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் 50 பேர் திடீரென அத்துமீறி நுழைந்தனர், இந்திய எல்லைக்குள் 19 கி.மீ நுழைந்த அவர்கள் கூடாரங்களை அமைத்து தங்கினர். இதை தொடர்ந்து மத்திய அரசு, சீன ராணுவ அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தை நடத்திவந்தது, இந்நிலையில் நேற்று திடீரென லடாக் பகுதியில் முகாமிட்டிருந்த சீன ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. இதனை அடுத்து இந்திய ராணுவமும் வாபஸ் பெறப்பட்டது. இதனால் லடாக் பகுதியில், கடந்த, 20 நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது.
|