கடந்த 40 ஆண்டுகளாக சீனாவில் அமலில் இருந்துவரும் ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன அரசு கடந்த 1970ம் ஆண்டு முதல், ஒரு குழந்தை திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் படி, ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அரசின் இந்த முடிவு காரணமாக, தற்போது சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையில் கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு குழந்தை திட்டத்தின்படி பிறந்தவர்கள், தற்போது இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.
|