சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு மரண தண்டனை அளிக்கும் அதிகாரத்தை சீன அரசு அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ளது. சீனாவில் பெருகிவரும் தொழிற்சாலை மற்றும் வாகன புகைகளால் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் சுத்தமான காற்றை கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதனை அடுத்து சீன அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுற்றுசூழல் விவகாரத்தில் அக்கறை காட்டாத, மற்றும் பலமுறை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் தயங்க கூடாது என அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
|