ஊழல் செய்த சீன முன்னால் ரயில்வே அமைச்சருக்கு அந்நாட்டு நீதி மன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. சீனாவில் கடந்த 2003ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தார் லியு ஜிஜுன். இவரது பதவிகாலத்தில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம் ஜீஜுங்கிற்கு மரண தண்டனை வழங்க உத்தரவிட்டது. மேலும் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் கையகப்படுத்த ஆணைபிறபித்தது.
|