LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சின்ன செய்திகளும் வியாக்கியானங்களும்

"இங்கு பிச்சைக்காரர்கள் கிடையாது"
ஒட்டப்பட்டுள்ள சுற்றுலா தளங்களில்
குரங்குகளின் கூட்டம் மனிதனின்
கையை எதிர்பார்த்து !.


"குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம்"
நோட்டீஸ் ஒட்டி சென்றான்,
பதினைந்து வயது சிறுவன்.!

"லஞ்சம் தவிர்"
கை நீட்டியே வாழ்ந்து
ஓய்வு பெற்றவர் தினமும்
அலுவலக வாசலில் எதிர்பார்ப்புடன்.!

நேர்மையாய் வாழ்ந்து ஓய்வு
பெற்றவரும் அலுவலக வாசலில்
பணி ஓய்வு பணத்துக்காக !

"போலீஸ் சுற்றி வளைத்தனர்"
பாதுகாப்பு தர வேண்டி.!


"இயற்கையை வென்று விட்டோம்"
அறிவித்த இரண்டு நாட்களில்
புரட்டி போட்டது மழையும் காற்றும்.!


"கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும்"
அறிவித்த மந்திரியை கவலையுடன்
பார்த்தார் முன்னாள் தொழில் நண்பர் !.


"நாளை முதல் குடிக்க மாட்டேன்"
சத்தியம் செய்தான் மனைவியிடம்.
சாப்பிட்டபின் குடிக்கலாம் என்ற
நினைவு வைத்து !.


"காய்கறிகள் விலை ஏற்றம்"
கவலை படவேண்டாம் மனித
வாழ்க்கையை அடிக்கடி நினைவு
படுத்தும் பொருள் இது.

நாளையே விலை அதல
பாதாளத்தில்.!

Little News,and arquement
by Dhamotharan.S   on 14 Jun 2016  0 Comments
Tags: செய்திகள்   சின்ன செய்திகள்   வியாக்கியானம்   Seithigal   Chinna Seithigal        
 தொடர்புடையவை-Related Articles
சின்ன செய்திகளும் வியாக்கியானங்களும் சின்ன செய்திகளும் வியாக்கியானங்களும்
2014-ல் முக்கிய நிகழ்வுகள் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !! 2014-ல் முக்கிய நிகழ்வுகள் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன் செய்திகளின் நாயகன் யார் ? - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.