இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும், மதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுக வினர் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
|