சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிடி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள்-பயர் காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை அறிவியல் பாடத்துடன் முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி : உயரம் குறைந்த பட்சம் 170 செ.மீ., எடை இதற்கு நிகரானதாக இருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ.,யும் குறைந்த பட்சம் 5 செ.மீ., விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 19.01.2015 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் : 25
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/-ஐ போஸ்டல் ஆர்டர் மூலமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: பிஸிக்கல் ஸ்டாண்டர்ட் டெஸ்ட், டாகுமென்ட் வெரிபிகேஷன், எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து உரிய மண்டல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
DIG, CISF (South Zone) Rajaji Bhawan,
'D' Block, Besant Nagar,
Chennai, Tamilnadu - 600090.
விணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி நாள் : 19.01.2015
கூடுதல் தகவலுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_14_1415b.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
|