தமிழகத்தில் கடந்த வாரம் கழிப்பறை மற்றும் உணவக வசதிகளுடன் கூடிய இரண்டு கிளாசிக் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு பேருந்துகளும் சென்னை - ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் இயங்கிவந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த இரண்டு பேருந்துகளும் ரேடியேட்டரில் ஏற்பட்ட பழுதால், அடுத்தடுத்து பிரேக் டவுன் ஆகி நின்றன. இதனை அடுத்து பேருந்துகளை சரியாக பராமரித்து, சோதனை செய்யாத போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, இனிவரும் காலங்களில் பழைய பேருந்துகளை புனரமைத்து கிளாசிக் பேருந்துகளாக மாற்ற்றுவதற்கு பதிலாக புதிதாக "கிளாசிக்' பேருந்துகளைத் தயாரிக்கபோவதாக அவர் தெரிவித்தார்.
|