LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

செம்மொழி

உருவகமாகிப் போன மகரந்தம்
எடுக்க எத்தனை ரீங்காரங்கள்
ஊமையாய் உவமையில்லாமல்

முட்டை உடைந்த
குஞ்சுகள் வழியாக
பகுப்பதங்களுக்குள்ளே அழகிய
பகாப்பதங்களும் பேசும்

காக்கைக் கூட்டில்
பிறந்தாலும் குயிலினங்கள்
சந்திப்பிழையின்றிக் கத்தும்

சலனம் செரித்த சாயங்கால
வேளையில் இன்னிசையளபெடுக்கும்
குருவிகளின் குரல் கேட்டு
எட்டிக் குதித்தோடும் நிசப்தம்.

பனிச் சறுக்கலில் சரியும்
பசுக்கள் 'ம'கரத்தில்
கதறுமாம்

பணி முடித்தப்பின் அரிமாக்கள்
'க'கரத்தில் கர்ஜிக்குமாம்

உற்று நோக்கினால்
முல்லை விரியும் சப்தத்தில்
மெல்லினங்கள் மலரக்கூடும்

ஒற்றைக் கிளைகளில்
இலவம்பஞ்சு தெறிக்கையில்
வல்லினங்கள் வெடிக்கக்கூடும்.

புவியீர்ப்பு கவர்ச்சியில்
மீன்கள் உருளும் அந்த நீரில்
இடையினங்கள் மீட்கக்கூடும்.

சேகரித்ததுண்டா? சேகரியுங்கள்
அதுவும் நம் செம்மொழியே!

-நீச்சல்காரன்

by Neechalkaran   on 16 Mar 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
29-Mar-2014 03:36:29 Arul said : Report Abuse
Arumai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.