LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வனப்பகுதியில் மலை ஏறுவதற்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில்  வனப்பகுதிகளில் மலையேற்றத்திற்கான ஒழுங்கு முறை விதிகளை தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது.

தேனிமாவட்டம், குரங்கணி பகுதியில், இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டூத்தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தீக்கு இரையாகிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டின் அனைத்து காப்புக் காடுகள் மற்றும் வன உயிரினப் பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் மலையேற்றத்திற்கான புதிய விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவை:

மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலர் அல்லது வன உயிரினக் காப்பாளர் அல்லது துணை இயக்குநரின் முன் அனுமதியினை உரிய முறையில் பெற வேண்டும். 

மலையேற்றம் மேற்கொள்வதற்கான பாதைகள், எளிதான பாதை, மிதமானபாதை மற்றும் கடினமானபாதை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 

எளிதான பாதைக்கு ஒரு நபருக்கு 200 ரூபாயும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு 350 ரூபாயும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு 500 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வெளிநாட்டுப் பயணிகளை பொறுத்த வரையில், எளிதான பாதைக்கு ஒருநபருக்கு ஆயிரத்து 500 வீதமும், மிதமான பாதைக்கு ஒரு நபருக்கு 3 ஆயிரம் ரூபாயும், கடினமான பாதைக்கு ஒரு நபருக்கு 5 ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 எளிதானபாதை மற்றும் மிதமானபாதைகளில் மலையேற்றம் மேற்கொள்ளும் குழுவினர் தங்களுடன் ஒரு வழிகாட்டியை கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். 

 கடினமான பாதையில் மலையேற்றம் மேற்கொள்ளும் போது ஒருவழிகாட்டி மற்றும் வன ஊழியர் ஒருவரையும் அழைத்துச் செல்லவேண்டும்

வனத்துறையில் பதிவுசெய்து கொள்ளாத எந்த ஒருநிறுவனம் அல்லது சங்கம் அல்லது அமைப்பும் மலையேற்றப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்ய இயலாது

இவ்வாறு தமிழ்நாடு வனத்துறை அறிவித்து உள்ளது.

by   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.