நிலக்கரி சுரங்க முறைக்கேடு தொடர்பான மத்திய புலனாய்வு துறையின் அறிக்கை நேற்று உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை விவரங்கள் மத்திய சட்ட அமைச்சர், பிரதமர் அலுவலக அதிகாரி, மத்திய நிலக்கரித் துறை அதிகாரி ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது உண்மை என கூறப்பட்டு இருந்தது.ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்பு, அந்த அறிக்கையில் திருத்தம் செய்ய மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் நெருக்குதல் கொடுத்தாரா? அல்லது அவரது அறிவுறுத்தலின்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டனவா? என்பதை அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.
|