LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குழந்தையின் சிகிச்சைக்காக, கோவையில் ஒரே நேரத்தில் 12 சிக்னல்கள் நிறுத்தம் - சினிமாவை விஞ்சிய சம்பவம் !!

ஒரு குழந்தையின் அவசர சிகிச்சைக்காக, கோவையின் முக்கிய சிக்னல்கள் உட்பட 12 போக்குவரத்து சிக்னலை ஒரே நேரத்தில் நிறுத்தி அவசர ஊர்தி மருத்துவமனை வரை விரைவாக செல்ல உதவிய கோவை காவல்துறையினருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜேடர்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளரான ஜெய்பிரகாஷ்க்கு தாமரை என்ற மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம், மின்விசைத்தறி இயங்கி கொண்டிருந்தபோது, ஜெய்பிரகாஷின் பெண் குழந்தை தெரியாமல் கையை உள்ளே விட்டது. இதனால் அந்த பிஞ்சு குழந்தையின் நான்கு விரல்கள் துண்டானது. அவ்விரல்களை, ஐஸ் பெட்டியில் வைத்து, ஆம்புலன்சில் கோவை கங்கா மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அழைத்து வர ஏற்பாடு செய்தனர்.

கோவை நகருக்குள், பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விட்டால், மருத்துவமனைக்கு செல்வது தாமதாகி விடும். ஆம்புலன்ஸ் டிரைவர் சங்க தலைவர் திபேஷ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை தொடர்புகொண்டு, இடையூறின்றி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
அவிநாசி ரோடு சித்ரா முதல் சாய்பாபா காலனி, கங்கா மருத்துவமனை வரை, 12 சிக்னல்களை, நேற்று மாலை ஒரே நேரத்தில் சிவப்பு விளக்கு எரிய வைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அனைத்து சிக்னலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 'கிரீன் காரிடர்' முறையில், ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆம்புலன்ஸ் விரைந்து சென்றதால், உடனடியாக குழந்தைக்கு ஆபரேஷன் செய்து, துண்டான கை விரல் இணைக்கப்பட்டது.

கோவை போக்குவரத்து காவல்துறையினரின் இந்த துரித செயலுக்கு பொது மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

by Swathi   on 08 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.