தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வினாத்தாளின் ஆறாவது பக்கத்தில் 5 மதிப்பெண்களுக்கு படிவம் நிரப்பும் பகுதி கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், பெரும்பாலான தேர்வு மையங்களில் இந்த படிவம் கொடுக்கப்படாததால் மாணவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு தேர்வுகள் துறை இயக்குநர், மாணவர்கள் விடைத்தாள்களிலேயே படிவத்திற்கான பதிலை நிரப்ப வேண்டும் என அனைத்து தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் முழுமையான பதிலை நிரப்பாவிட்டாலும் விடை எழுத முயற்சித்திருந்தால்கூட ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
|