நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சி.பி.ஐ. அறிக்கையில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் திருத்தம் செய்த விவகாரம், ரெயில்வே வாரிய உறுப்பினர் ஒருவர் உயர்பதவி பெற ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் சகோதரி மகன் ரூ.10 கோடி பேரம் பேசி சிக்கிய பிரச்சினை ஆகியவற்றால் பாராளுமன்றத்தில் புயல் வீசி வருகிறது. இந்நிலையில் தவறு செய்த இந்த இரு மத்திய மந்திரிகளும் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது. மேலும் அமைச்சர்கள் பதவி விலகும் வரை நாடாளமன்றத்தை சுமூகமாக நடத்த விட மாட்டோம் என அந்த கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
|