|
|||||
உதயமானது தனி தெலுங்கானா ! |
|||||
44 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இந்த அறிவிப்பை தெலங்கானா ஆதரவாளர்கள்
மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நேற்று பிரதமர் இல்லத்தில் தெலங்கானா விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் இந்த
விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு கூட்டத்திலும் ஆந்திராவைப் பிரித்து தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் யோசனை ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த
முடிவுக்கு பாரதிய ஜனதா, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
புதிதாக உருவாகும் தெலுங்கான மாநிலத்தில், அதிலாபாத், கரிம் நகர், கம்மம், மகபூப் நகர், மேடக், நல்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் மற்றும் ஐதராபாத் ஆகிய 10 மாவட்டங்கள் இடம்
பெரும். ஆந்திராவுக்கும், தெலுங்கானவுக்கும் அடுத்த பத்து வருடத்திற்கு, ஐதராபாத் தலைநகராக விளங்கும். ஆனாலும், புதிய பகுதிகளையோ, மாவட்டங்களையோ சேர்ப்பது குறித்து மத்திய அமைச்சர்கள்
குழு முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி தெலுங்கான முடிவுக்கு ஆந்திர காங்கிரசார் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
44 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தெலங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இந்த அறிவிப்பை தெலங்கானா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நேற்று பிரதமர் இல்லத்தில் தெலங்கானா விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. மேலும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு கூட்டத்திலும் ஆந்திராவைப் பிரித்து தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் யோசனை ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த முடிவுக்கு பாரதிய ஜனதா, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
புதிதாக உருவாகும் தெலுங்கான மாநிலத்தில், அதிலாபாத், கரிம் நகர், கம்மம், மகபூப் நகர், மேடக், நல்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் மற்றும் ஐதராபாத் ஆகிய 10 மாவட்டங்கள் இடம் பெரும். ஆந்திராவுக்கும், தெலுங்கானவுக்கும் அடுத்த பத்து வருடத்திற்கு, ஐதராபாத் தலைநகராக விளங்கும். ஆனாலும், புதிய பகுதிகளையோ, மாவட்டங்களையோ சேர்ப்பது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி தெலுங்கான முடிவுக்கு ஆந்திர காங்கிரசார் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 31 Jul 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|