LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் காலமானார்

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் இன்று சென்னையில் காலமானார்.

 

அவருக்கு வயது 86.

 

காமராஜர் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில், செய்தி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் பூவராகவன்.

 

இன்று அதிகாலை அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் திடீரென்று மரணம் அடைந்தார். இவரது சொந்த ஊர் விருத்தாச்சலம் ஆகும்.

 

1962ம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூவராகவன், காமராஜர் அமைச்சரவையில் அமைச்சரானார். 1

 

967ம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்தார். பின்னர் கடலூர், மேட்டூர் எம். பி தொகுதிகளில் போட்டியிட்டு 2 முறை எம்.பியாகவும் செயல்பட்டுள்ளார்.

 

மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்த பூவராகவன் இன்று மரணமடைந்தார்.

 

1967 தேர்தலில் முதலமைச்சர் பக்தவத்சலம் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் தோல்வியடைந்தனர். அப்போது வெற்றிபெற்ற ஒரே காங்கிரஸ் அமைச்சர் விருத்தாசலத்தில் போட்டியிட்ட பூவராகன்.

 

1971 தேர்தலில் மேட்டூர் மக்களவைத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றவர்.

 

பூவராகவன் உடலுக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சரும், பூவராகவனின் நண்பருமான பண்ருட்டி ராமச்சந்திரனும் அஞ்சலி செலுத்தினார்.

by Swathi   on 23 Feb 2014  0 Comments
Tags: பூவராகவன்   காங்கிரஸ் பூவராகவன்   Povaragavan   Congress Minister Povaragavan   Povaragavan Death        
 தொடர்புடையவை-Related Articles
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் காலமானார் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் காலமானார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.