கர்நாடகாவில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சற்று முன் நிலவரப்படி காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக ஜனதா தள கட்சியும், அதனைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியும் உள்ளது.வாக்கு எண்ணிக்கைகாக மாநிலம் முழுவதும் 36 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகலுக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
|