மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்கான தங்களின் உயிரை தியாகம் செய்தனர். ஆனால் தற்போதுள்ள அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
சாதாரண மக்கள் தங்களின் தினசரி வாழ்வில் ஊழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னையே ஊழல்தான். அரசின் வேற்றுமையாலேயே நக்சல்கள் நாட்டில் பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களை சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் வாழும் அற்புதமான நாடு இந்தியா.
சாதிக் கட்சிகள், வரதட்சணை போன்ற சமூகத்தில் நிலவும் தீய சக்திகள் இந்தியாவைப் பாழ்படுத்தி வருகின்றன.
என தலாய்லாமா கூறியுள்ளார்.
|