LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நீதிமன்ற உத்தரவுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
1989-இல் தமிழக பொது நூலக துறையையும்,  மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக அறிவித்த தமிழக அரசு, மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்களை 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது. 
 
இதற்கு எதிரான வழக்கில் பதவி உயர்வு விதிகளை வகுக்க தமிழக நிர்வாகத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு தற்காலிக விதிகளை வகுத்தது. 
இந்த நிலையில், மாவட்ட நூலகர்களாக இருந்து, விதிகளின் படி 2 மற்றும் 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றப்பட்ட 4 பேர் வழக்கு தொடர்ந்தனர். 
 
அந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், தீர்ப்பாயம் உத்தரவிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு விதிகள் வகுத்ததால், வழக்கு மூலம் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது என  உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
 
இனியாவது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலிக விதிகளை வகுத்த தமிழக அரசு, மனுதாரர்களுக்கு வழக்குச் செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1989-இல் தமிழக பொது நூலக துறையையும்,  மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக அறிவித்த தமிழக அரசு, மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்களை 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது.

இதற்கு எதிரான வழக்கில் பதவி உயர்வு விதிகளை வகுக்க தமிழக நிர்வாகத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு தற்காலிக விதிகளை வகுத்தது.

இந்த நிலையில், மாவட்ட நூலகர்களாக இருந்து, விதிகளின் படி 2 மற்றும் 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றப்பட்ட 4 பேர் வழக்கு தொடர்ந்தனர். 

அந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், தீர்ப்பாயம் உத்தரவிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு விதிகள் வகுத்ததால், வழக்கு மூலம் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது என  உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

இனியாவது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலிக விதிகளை வகுத்த தமிழக அரசு, மனுதாரர்களுக்கு வழக்குச் செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

by   on 17 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.