|
|||||
சுப்ரீம் கோர்ட்டின் புதிய கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு விற்பனை கடும் பாதிப்பு! |
|||||
சுப்ரீம் கோர்ட்டின் புதிய கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய பட்டாசு உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர். பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தடைவிதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அவற்றில் தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி மற்றும் குறிப்பிட்ட பட்டாசு வகைகளுக்கு தடை, ஆகியவை அடங்கும்.
இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து முதலில் மகிழ்ந்தாலும், சிவகாசியில் பட்டாசு விற்பனை சரிவை சந்தித்து உள்ளது. பட்டாசு விற்பனை குறைந்ததால் பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரம் உற்பத்தியாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். நடப்பு ஆண்டு தீபாவளியை நம்பி ஏராளமான பட்டாசுகளை உற்பத்தி செய்து விட்டதாக பட்டாசு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். புதிய கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய கட்டுப்பாடுகளால் சிவகாசியில் பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய பட்டாசு உற்பத்தியாளர்கள் முடிவு செய்து உள்ளனர். பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தடைவிதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அவற்றில் தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி மற்றும் குறிப்பிட்ட பட்டாசு வகைகளுக்கு தடை, ஆகியவை அடங்கும். இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து முதலில் மகிழ்ந்தாலும், சிவகாசியில் பட்டாசு விற்பனை சரிவை சந்தித்து உள்ளது. பட்டாசு விற்பனை குறைந்ததால் பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரம் உற்பத்தியாளர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். நடப்பு ஆண்டு தீபாவளியை நம்பி ஏராளமான பட்டாசுகளை உற்பத்தி செய்து விட்டதாக பட்டாசு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். புதிய கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
|
|||||
by Mani Bharathi on 26 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|