இந்தியாவில், புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதால், நாடு மேலும் பலவீனம் அடையும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், அசம்கார் பகுதியில், ஜனதந்த்ர யாத்திரை மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே, கூறியதாவது, பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதால், நாடு பலவீனம் அடைவதோடு மட்டுமலாமல், தனி மாநிலம், மாவட்டம் கேட்பவர்களின் கோரிக்கைகளுக்கு மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது. எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். நாட்டு மக்களின் சேவையில் தொடர்ந்து ஈடுபடுவர். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதும், லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, உண்ணாவிரதம் இருப்பேன். உத்திர பிரதேசத்தில், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி, துர்கா, பணி நீக்கம் செய்யப்பட்டதை, மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவரை போன்ற நேர்மையான அதிகாரிகளை காண்பதே அரிதாகிவிட்டது என ஹசாரே தெரிவித்தார்.
|