கடந்த மாதம் இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த, அமெரிக்காவின், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ கப்பலின் ஊழியர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 12 பேர் இந்தியர்கள் என்பதால், அவர்கள், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற வெளிநாட்டவர்கள் 23 பேர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் உணவு பழக்கவழக்கங்களில் சாக்லெட் மற்றும் சிகரெட் ஆகியவற்றை அதிகம் விரும்புகின்றனர். அதனால், சிறை அதிகாரிகளிடம், அவர்கள் நாட்டு தயாரிப்பான சாக்லெட், சிகரெட் ஆகியவற்றை கேட்டு உள்ளனர். ஒரு சாக்லெட், இந்திய ரூபாய் மதிப்பின்படி, 4,900 ரூபாய் என்று கூறப்படுகிறது. சிகரெட்டும் அதே போன்று விலை அதிகம். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள், சிறை விதிப்படி, தடை செய்யப்பட்ட அந்த பொருட்களை, சிறைக்குள் அனுமதிக்க முடியாது என மறுத்துள்ளனர்.
|