ராஜுமுருகன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் படம் குக்கூ. பார்வையற்றவர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும் மாளவிகாவின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாளவிகாகவோ இனி நடிக்க மாட்டேன், பைலட் ஆக போகிறேன் என்கிறார்.
இது குறித்து மாளவிகா கூறியதாவது, நிஜமாக எனக்கு சினிமால நடிக்கணும்னு ஆசையே கிடையாது விமான பைலட் ஆகணுங்கறதுதான் என்னோட லட்சியம். நான் இப்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன்.
சும்மா ஒரு பொழுதுபோக்குக்காக நடிக்க வந்தேன். டைரக்டர் ராஜு முருகன் சார் கதை சொன்னதும் ஒரு சேலன்ஞ்சுக்காக நடிக்க ஆரம்பிச்சேன். இனி நடிக்கும் உத்தேசம் இல்லை. ஜெர்மனியில் கமர்ஷியல் பைலட் படிப்புக்கு அப்ளை பண்ணியிருக்கேன். கிடைச்சதும் போய்விடுவேன். இடையில எனக்கு கேப் கிடைக்கும்போது குக்கூ மாதிரி சவாலான கேரக்டர் எதுவும் கிடைத்தால் நடிப்பதை பற்றி யோசிக்கலாம் என்கிறார் மாளவிகா.
|