தேவையானவை :
மாங்காய் - 1 புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு, தக்காளி - 1
தாளிப்பதற்கு :
கடுகு - 1 டீஸ்பூன் உ.பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கறிவடகம் - 1டீஸ்பூன் சி.வெங்காயம் - 10, கறிவேப்பிலை.
வறுத்து அரைக்க:
வரமிளகாய் - 5, மல்லி விதை - 4டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/4டீஸ்பூன் சி. வெங்காயம் - 6, கறிவேப்பிலை - ஒரு கொத்து, தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை:
1.முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 டீஸ்பூன் ஊற்றி தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை போட வேண்டும்.
2.அதில் புளியை கரைத்து மாங்காயை போட்டு உப்பு சேர்க்க வேண்டும்.
3.அடுப்பை ஸிம்மில் வைத்து கொதிக்க விட்டு எண்ணை தெளிந்ததும் இறக்க வேண்டும்.
|