|
||||||||
கருணைக் கிழங்கு மசியல் (yam masiyal) |
||||||||
தேவையானவை: கருணைக் கிழங்கு – 1/4 கிலோ புதுப்புளி – சிறிய எலுமிச்சை அளவு நீள வரமிளகாய் - 6 வெந்தயம் – 1/2 டீஸ்பூன் ஜீரகம் – 1 டீஸ்பூன் இஞ்சி – சிறு துண்டு சின்ன வெங்காயம் - 15 கல் உப்பு – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பச்சை கொத்தமல்லி நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன் கடுகு செய்முறை: 1.குக்கர் பத்திரத்தில் கிழங்கைப் போட்டு மூன்று விசில் வரை விட்டு, வேகவைத்துக் கொள்ளவும். வெந்த கிழங்கை நன்றாக ஆறவைத்து கையால் நன்கு மசித்துக் கொள்ளவும். 2.வறுத்த வெந்தயம், வரமிளகாய், ஜீரகம் எல்லாவற்றையும், கல் உப்போடு சேர்த்து பொடித்துக் கொண்டு, பின் வதக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து துருவியது போல, போட்டு அரைத்துக் கொள்ளவும். 3.கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து, மசித்த கிழங்கு, அரைத்த விழுது, சேர்த்து புளிக்காய்ச்சலுக்கு எண்ணெய் கசிய கொதிக்க விடுவது போல கொதிக்க விடவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|